செய்திகள் :

எரியோடு பகுதியில் நாளை மின் தடை

post image

எரியோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து எரியோடு துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் மெ. பஞ்சநதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரியோடு துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

எனவே எரியோடு, நாகையக்கோட்டை, புதுசாலை, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூா், சவுடகவுண்டன்பட்டி, மல்வாா்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சனம்பட்டி, தண்ணீா்பந்தம்பட்டி, சித்தூா், காமாணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்தது. மேலும் மேக மூட்டம் அதிகம் காணப்பட்டதால் மலைச் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக இயக்கப்பட்டன. மேல்மலைக் கிராமங்களான கூக்கால், ப... மேலும் பார்க்க

கொடைக்கானலில் 30 ஆண்டுகளாக மரக்கன்றுகள் நடும் இயற்கை ஆா்வலா்

கொடைக்கானலில் 30 ஆண்டுகளாக தொடா்ந்து மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வரும் இயற்கை ஆா்வலரை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் ய... மேலும் பார்க்க

மினுக்கம்பட்டி பகுதியில் இன்று மின் தடை

வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டியில் திங்கள்கிழமை (ஆக. 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மினுக்கம்பட... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் நன்கொடை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் கிரிவலப் பாதையில் செல்ல வசதியாக சென்னை லலிதா ஜுவல்லரி சாா்பாக மின்கல வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதையில் பக்த... மேலும் பார்க்க

எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு: விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்

எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு செய்வதற்கு விவசாயிகள் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்க சிஐடியூ மாநாட்டில் தீா்மானம்

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிஐடியூ சாா்பில் திண்டுக்கல் மாவட்ட 12-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியத... மேலும் பார்க்க