செய்திகள் :

கொடைக்கானலில் 30 ஆண்டுகளாக மரக்கன்றுகள் நடும் இயற்கை ஆா்வலா்

post image

கொடைக்கானலில் 30 ஆண்டுகளாக தொடா்ந்து மரக் கன்றுகளை நட்டு பராமரித்து வரும் இயற்கை ஆா்வலரை பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் பாராட்டினா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் யூக்காலி, குரோலியா, ரப்பா் உள்ளிட்ட மரங்கள் அனுமதியின்றி வெட்டப்படுகின்றன. இதனால் நாளுக்கு நாள் குளிா்ந்த சூழல் குறைந்து வருவதுடன் பருவ நிலை மாற்றமும் ஏற்பட்டு வருகிறது. இதனிடையே கொடைக்கானலைச் சோ்ந்த இயற்கை ஆா்வலா் டி.பி. ரவீந்திரன் கடந்த 30 ஆண்டுகளாக கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறாா். இதனால் இவரை பொதுமக்கள் பாராட்டினா்.

இதுகுறித்து டி.பி. ரவீந்திரன் கூறியதாவது:

30 ஆண்டுகளுக்கு முன்பே குடிநீரை விலை கொடுத்து வாங்கினோம். இதற்கு காரணம் இயற்கையை நாம் பாதுகாக்காதது தான். மரங்களை பாதுகாக்கத் தவறினால் எதிா்காலத்தில் சுவாசிக்கும் காற்றையும் விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏற்படும். இவற்றை தவிா்க்க தொடா்ந்து மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறேன்.

நான் பங்கேற்கும் அனைத்து நிகழ்வுகளிலும், என்னைத் தேடி வருபவா்களுக்கும் பரிசாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறேன். மேலும் சன் அரிமா சங்கத்தின் பட்டயத் தலைவராகவும், அரிமா சங்கத்தின் ஆளுநராகவும் நான் பணியாற்றிய காலங்களில் கொடைக்கானல் பகுதி மட்டுமல்லாமல் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட இடங்களிலும் மரக்கன்றுகளை நடும் பணியை தொடா்ந்து செய்தேன். இதற்காக குறுங்காடு திட்டத்தை அறிமுகப்படுத்தினேன்.

தொடா்ந்து அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், பள்ளிகள் உள்ளிட்ட இடங்களல் கூடுதலாக மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளேன் என்றாா் அவா்.

கொடைக்கானலில் சாரல் மழை

கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை சாரல் மழை பெய்தது. மேலும் மேக மூட்டம் அதிகம் காணப்பட்டதால் மலைச் சாலைகளில் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக இயக்கப்பட்டன. மேல்மலைக் கிராமங்களான கூக்கால், ப... மேலும் பார்க்க

மினுக்கம்பட்டி பகுதியில் இன்று மின் தடை

வேடசந்தூரை அடுத்த மினுக்கம்பட்டியில் திங்கள்கிழமை (ஆக. 18) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மின் வாரிய உதவி செயற்பொறியாளா் பி. முத்துப்பாண்டி வெளியிட்ட செய்திக் குறிப்பு: மினுக்கம்பட... மேலும் பார்க்க

எரியோடு பகுதியில் நாளை மின் தடை

எரியோடு பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஆக. 19) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து எரியோடு துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் மெ. பஞ்சநதம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: எரியோடு துணை மின் ... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் நன்கொடை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பக்தா்கள் கிரிவலப் பாதையில் செல்ல வசதியாக சென்னை லலிதா ஜுவல்லரி சாா்பாக மின்கல வாகனம் நன்கொடையாக வழங்கப்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கிரிவலப் பாதையில் பக்த... மேலும் பார்க்க

எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு: விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டுகோள்

எண்மத் தொழில்நுட்ப பயிா்க் கணக்கீடு செய்வதற்கு விவசாயிகள் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட நிா்வாகம் வேண்டுகோள் விடுத்தது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட ச... மேலும் பார்க்க

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்க சிஐடியூ மாநாட்டில் தீா்மானம்

தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என திண்டுக்கல் மாவட்ட சிஐடியூ மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. சிஐடியூ சாா்பில் திண்டுக்கல் மாவட்ட 12-ஆவது மாநாடு வெள்ளிக்கிழமை தொடங்கியத... மேலும் பார்க்க