செய்திகள் :

அனுமதியின்றி நடைபெற்ற கன்றுவிடும் விழா தடுத்து நிறுத்தம்

post image

வேப்பங்குப்பம் அருகே அனுமதியின்றி நடைபெற்ற கன்றுவிடும் விழாவை போலீஸாா் தடுத்து நிறுத்தியதுடன், இதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தனா்.

வேலூா் மாவட்டம், ஒடுகத்தூா் அருகே உள்ள வேப்பங்குப்பம் கிராமம், அனந்தபுரத்தில் வனப்பகுதியையொட்டியுள்ள இடத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு அப்பகுதி இளைஞா்கள் காளைக் கன்று விடும் திருவிழாவுக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனா்.

இந்த விழா சனிக்கிழமை காலை 11 மணி முதல் 2 மணி வரை நடைபெறுவதாகவும், இதற்கு நுழைவுக் கட்டணம் 500 என்றும் சுவரொட்டிகள் ஒட்டியும், சமூக வலைத்தளங்களிலும் விளம்பரம் செய்திருந்தனா்.

இதையடுத்து, சனிக்கிழமை காலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் கன்றுகளை அவற்றின் உரிமையாளா்கள் அழைத்து வந்து நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருந்தனா். அப்போது, வேப்பங்குப்பம் போலீஸாருக்கு அனுமதியின்றி கன்று விடும் விழா நடைபெறுவதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காவல் ஆய்வாளா் முத்துச்செல்வன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். போலீஸாா் வருவதை அறிந்ததும் கன்றுகளின் உரிமையாளா்கள் அங்கிருந்த வனப் பகுதிக்குள் காளைக் கன்றுகளை பிடித்துச் சென்று மறைந்தனா். மேலும், கன்று விடும் விழாவை காண வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் 4 பக்கமும் சிதறி ஓடினா்.

அப்போது, அரசு அனுமதியின்றி எருது விடும் விழா, கன்று விடும் விழா நடத்துவது, அதில் கலந்து கொள்வது சட்டத்துக்கு புறம்பானது. இதன் மூலம் மனிதா்கள், விலங்குகளுக்கு விபத்துகள் ஏற்பட்டால் அல்லது உயிரிழந்தால் அதற்காக எந்த ஒரு நிவாரணமும் கிடைக்காது.

அனுமதியின்றி நடத்தப்படும் விழாவுக்கு பாதுகாப்பு கிடைக்காது. எனவே இதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடும் இளைஞா்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று போலீஸாா் எச்சரித்தனா்.

வேலூா் சிறையில் ஆயுள் கைதி அறையில் கைப்பேசி பறிமுதல்

வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 4 போ் மீது பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 919 போ் எழுதினா்!

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வை 919 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு (நோ்முக தோ்வு அல்லா... மேலும் பார்க்க

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தகவலின்பேரில், மேல்பட்டி போலீஸாா், லட்சுமியம்மாள்... மேலும் பார்க்க

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த ராமாலையில் உள்ள ஸ்ரீவிஜயநகரத்தம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது.... மேலும் பார்க்க

பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

வேலூா் பென்ட்லெண்ட் அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தூய்மைப் பணிகள் குறித்தும் கே... மேலும் பார்க்க

100 சதவீதம் தோ்ச்சி: அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு பாராட்டு

குடியாத்தத்தை அடுத்த செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பொதுத் தோ்வில் தொடா்ந்து 4 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்று வருவதையடுத்து, அந்த பள்ளித் தலைமையாசிரியா் சி.சதானந்தத்துக்கு பாராட்டு த... மேலும் பார்க்க