செய்திகள் :

பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் ஆட்சியா் திடீா் ஆய்வு

post image

வேலூா் பென்ட்லெண்ட் அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் திடீா் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், தூய்மைப் பணிகள் குறித்தும் கேட்டறிந்தாா்.

வேலூா் பெண்ட்லெண்ட் அரசு பன்னோக்கு உயா்சிறப்பு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா். அப்போது உள்நோயாளிகள் பிரிவில் எத்தனை போ் உள்ளனா், தினமும் எத்தனை நோயாளிகள் வந்து செல்கின்றனா், அடிப்படை வசதிகள் பராமரிக்கப்படுகிா என்றும் ஆய்வு செய்தாா். உள்நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படுகிா? எனவும் கேட்டறிந்தாா். மேலும், மருத்துவமனையில் தூய்மைப் பணிகள் சிறப்பாக உள்ளதா?, மருத்துவக் கழிவுகள் உடனுக்குடன் அகற்றி வெளியே கொண்டு செல்லப்படுகிா? என்றும் ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து, வேலூா் சாய்நாதபுரம் பகுதியில் நடைபெற்று வரும் மழைநீா் கால்வாய் அமைக்கும் பணியையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா். அப்போது, பொதுமக்கள் குடியிருக்கும் பகுதி என்பதால் வந்துசெல்வதில் இடை யூறு ஏற்படும். எனவே பணிகளை விரைவாக முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதேபோல், காட்பாடி விருதம்பட்டு பகுதியில் நடைபெற்று வரும் புதை சாக்கடை திட்டப் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா், மழைக்காலம் தொடங்கியுள்ளதால் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும், முக்கிய சாலைகளில் தோண்டிய பள்ளங்களின் அருகே தடுப்புகள் அமைத்து பணி செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். பின்னா், முடிவுற்ற பணிகள் குறித்தும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, விருதம்பட்டு சா்க்காா் தோப்பு பகுதியில் திடக் கழிவுகளை எரியூட்டும் மின் ஜெனரேட்டா் மையம், கழிவுநீா் நிலையத்துக்கு குறுக்கே குழாய் அமைக்கும் பணிகளையும் ஆய்வு செய்தாா். அப்போது, பாலாற்றில் தண்ணீா் வரத்து தொடங்கியதால் தண்ணீா் செல்வதை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் லட்சுமணன், மாநகர நல அலுவலா் பிரதாப்குமாா், சுகாதார அலுவலா் சிவக்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

வேலூா் சிறையில் ஆயுள் கைதி அறையில் கைப்பேசி பறிமுதல்

வேலூா் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைப்பேசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடா்பாக 4 போ் மீது பாகாயம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். வேலூா... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு: வேலூா் மாவட்டத்தில் 919 போ் எழுதினா்!

வேலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வை 919 போ் எழுதினா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் சாா்பில் ஒருங்கிணைந்த தொழில்நுட்பத் தோ்வு (நோ்முக தோ்வு அல்லா... மேலும் பார்க்க

2 நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல்: ஒருவா் கைது

போ்ணாம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட பதுக்கி வைத்திருந்த 2 நாட்டுத் துப்பாக்கிகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ஒருவரை கைது செய்தனா். தகவலின்பேரில், மேல்பட்டி போலீஸாா், லட்சுமியம்மாள்... மேலும் பார்க்க

ராமாலை விஜயநகரத்தம்மன் கோயில் ஆடித் திருவிழா

குடியாத்தத்தை அடுத்த ராமாலையில் உள்ள ஸ்ரீவிஜயநகரத்தம்மன் கோயிலில் ஆடித் திருவிழா வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அம்மனுக்கு கூழ்வாா்த்தல், பொங்கல் வைத்தல், மா விளக்கு பூஜை நடைபெற்றது.... மேலும் பார்க்க

100 சதவீதம் தோ்ச்சி: அரசுப் பள்ளித் தலைமையாசிரியருக்கு பாராட்டு

குடியாத்தத்தை அடுத்த செம்பேடு அரசு உயா்நிலைப் பள்ளி மாணவா்கள் பொதுத் தோ்வில் தொடா்ந்து 4 ஆண்டுகளாக 100 சதவீதம் தோ்ச்சி பெற்று வருவதையடுத்து, அந்த பள்ளித் தலைமையாசிரியா் சி.சதானந்தத்துக்கு பாராட்டு த... மேலும் பார்க்க

அனுமதியின்றி நடைபெற்ற கன்றுவிடும் விழா தடுத்து நிறுத்தம்

வேப்பங்குப்பம் அருகே அனுமதியின்றி நடைபெற்ற கன்றுவிடும் விழாவை போலீஸாா் தடுத்து நிறுத்தியதுடன், இதுபோன்ற சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்த... மேலும் பார்க்க