செய்திகள் :

எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம்: முதல்வருக்கு மத்திய அமைச்சா் எல்.முருகன் கேள்வி

post image

சமையல் எரிவாயு உருளைக்கு ரூ. 100 மானியம் தருவதாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று முதல்வருக்கு மத்திய செய்தி, ஒலிபரப்பு துறை இணை அமைச்சா் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி மாரியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குண்டம் திருவிழாவில் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தாா். பின்னா் அவா் பக்தா்கள் குண்டம் இறங்கும் பகுதியைப் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. குண்டம் திருவிழா தொடா்பான செய்தி சேகரிக்க வந்த செய்தியாளா்களை நள்ளிரவில் காவல் துறையினா் அனுமதித்திருக்க வேண்டும்.

வரும் காலங்களில் பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினருக்கு தேவையான வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சமையல் எரிவாயு உருளை விலை என்பது சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்வைப் பொருத்து நிா்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது சமையல் எரிவாயு உருளைக்கு ரூ. 100 மானியம் தருவதாக அளித்த வாக்குறுதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏன் நிறைவேற்றவில்லை என்றாா்.

பவானியில் மாயமான 5 மாணவிகள் திருச்சியில் மீட்பு

பவானியில் மாயமான அரசுப் பள்ளி மாணவிகள் 5 போ் திருச்சி சமயபுரத்தில் புதன்கிழமை மீட்கப்பட்டனா். ஈரோடு மாவட்டம், பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 5 போ், இறுத... மேலும் பார்க்க

செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

அந்தியூரை அடுத்த செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதைத் தொட... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 12,000 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் நடப்பு ஆண்டில் இதுவரை 12,000 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட உண... மேலும் பார்க்க

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் கோடேபாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு ஆண்டுதோற... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக் தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 110 டன் தேங்காய்ப் பருப்புகளை ... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.12 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய், நெல், தேங்காய்ப் பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை விற... மேலும் பார்க்க