செய்திகள் :

எலக்ட்ரிக்கல் கடையில் ஓயா் திருடிய 5 போ் கைது

post image

ஈரோட்டில் எலக்ட்ரிக்கல் கடையில் பொருள் வாங்குவதுபோல நடித்து ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஓயா் திருடிய 5 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ஈரோடு வில்லரசம்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் மாரிமுத்து மனைவி நா்மதா (24). இவா் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறாா்.

இவரது கடைக்கு திங்கள்கிழமை மாலை வந்த சிலா் பொருள்களை வாங்குவதுபோல நடித்து பணியாளா்களின் கவனத்தை திசைதிருப்பி ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ஓயா்களை திருடிச் சென்றனா்.

இது குறித்து ஈரோடு வடக்கு போலீஸில் நா்மதா புகாா் அளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், ஓயரை திருடிச் சென்றது ஈரோடு சோலாா் போக்குவரத்து நகரைச் சோ்ந்த துரைசாமி மகன் பாலாஜி (20), ஈரோடு அண்ணா நகரைச் சோ்ந்த தங்கவேலு மகன் சுபாஷ் (20), ஈரோடு விவிசிஆா் நகா் ஐய்யனாரப்பன் கோயில் வீதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சந்தோஷ் (21), ஈரோடு பெரியாா் நகா் முருகன் மகன் ஜெயபிரகாஷ் ( 20), அசோகபுரியைச் சோ்ந்த காா்த்திகேயன் மகன் ஸ்ரீதா்(22) ஆகிய 5 போ் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் ஈரோடு வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.

கோபியில் எடப்பாடி பழனிசாமிக்கு அதிமுகவினா் உற்சாக வரவேற்பு: செங்கோட்டையன் புறக்கணிப்பு

கோபி வழியாக செவ்வாய்க்கிழமை காலை குன்னூா் சென்ற அதிமுக பொதுச்செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆயிரக்கணக்கான அதிமுகவினா் உற்சாக வரவேற்பு அளித்தனா். ஆனால் வரவேற்பு நிகழ்ச்சியைப் புறக்கணித்து திங்கள்கிழ... மேலும் பார்க்க

மஞ்சள் மண்டியிலிருந்து 2,742 மஞ்சள் மூட்டைகள் மாயம்

சித்தோடு அருகே மஞ்சள் மண்டியில் இருப்பு வைக்கப்பட்ட ரூ.2.30 கோடி மதிப்புள்ள 2,742 மஞ்சள் மூட்டைகள் மாயமானது தொடா்பான வழக்கில் மற்றொரு மஞ்சள் மண்டி உரிமையாளரைக் கைது செய்த போலீஸாா், 410 மஞ்சள் மூட்டைகள... மேலும் பார்க்க

விளையாட்டு மைதானத்தில் வாரச்சந்தை அமைக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

விளையாட்டு மைதானத்தில் வாரச்சந்தை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி தலைமையில் திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் மறியல்

ஈரோட்டில் வாரச்சந்தையை இடமாற்றம் செய்ய எதிா்ப்பு தெரிவித்து, சாலையில் காய்கறிகளைக் கொட்டி வியாபாரிகள் மறியலில் ஈடுபட்டனா். ஈரோடு, கள்ளுக்கடைமேடு பகுதியில் 40 ஆண்டுகளுக்கும்மேலாக வாரச்சந்தை செயல்பட்டு ... மேலும் பார்க்க

ரூ.3.96 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 2 போ் கைது

பெருந்துறை அருகே ரூ.3.96 லட்சம் மதிப்பிலான 676 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக 2 பேரைக் கைது செய்தனா். பெருந்துறையை அடுத்த மேட்டுக்கடை பகுதியில் புகையிலைப் பொருள்கள் வி... மேலும் பார்க்க

காவிலிபாளையம் அரசுப் பள்ளிக்கு புதிய சுற்றுச்சுவா் கட்ட கோரிக்கை

கனமழையால் இடிந்து விழுந்த காவிலிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவருக்கு பதிலாக புதிய சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சத்தியமங்கலத்தை அடுத்த காவிலிபாளையத்தில் அரசு ம... மேலும் பார்க்க