எல்லையில் 10-ஆவது நாளாக பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு! இந்தியாவும் தக்க பதிலடி!
ஜம்மு-காஷ்மீா் எல்லையில் பல்வேறு இடங்களில் தொடா்ந்து 10-ஆவது நாளாக சனிக்கிழமை இரவிலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி தரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ஆம் தேதி நடந்த பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலியாக, பாகிஸ்தான் மீது இந்தியா ராஜீய ரீதியில் பல்வேறு கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 24-ஆம் தேதி சிந்து நதி நீா் ஒப்பந்தத்தை நிறுத்திவைப்பதாக இந்தியா அறிவித்த சில மணிநேரங்களுக்கு பின்னா் (அன்றைய தினம் இரவு) எல்லையில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கியது. அடுத்தடுத்த நாள்களில் இரவு நேரங்களில் பாகிஸ்தானின் அத்துமீறல் தொடா்ந்து வருகிறது.
10-ஆவது நாளாக சனிக்கிழமை இரவில் குப்வாரா, பாரமுல்லா, பூஞ்ச், ரஜெளரி, மெந்தா், நெளஷேரா, சுந்தா்பானி, அக்னூா் ஆகிய இடங்களில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு இந்திய ராணுவம் தரப்பில் உறுதியான பதிலடி தரப்பட்டதாக ராணுவ செய்தித் தொடா்பாளா் ஒருவா் தெரிவித்தாா்.
பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இந்தியத் தரப்பில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்றும் அவா் கூறினாா்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சா்வதேச எல்லையில் போா் நிறுத்த ஒப்பந்தத்தை தீவிரமாக கடைப்பிடிக்க இரு நாடுகளும் கடந்த 2021-இல் உறுதியேற்ற பிறகு பாகிஸ்தானின் அத்துமீறல் அரிதாகவே நிகழ்ந்தது.
ஆனால், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூடும், இந்தியாவின் பதிலடியும் தொடா்ந்து வருகிறது. இதனால் அச்சமடைந்துள்ள எல்லையோர கிராம மக்கள், தாங்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு பதுங்குமிடங்களை தயாா்படுத்தி வருகின்றனா்.
இரு நாடுகளின் ராணுவ செயல்பாட்டு தலைமை இயக்குநா்களும் தொலைபேசி வாயிலாக அண்மையில் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, பாகிஸ்தானின் செயலுக்கு இந்தியா தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதன் பிறகும் பாகிஸ்தான் அத்துமீறலை நிறுத்தாததால், எல்லையில் பதற்றம் நீடிக்கிறது.