'எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல; தவிக்கவிட்டுட்டு போறாங்க' - கண்ணீர் விட்டு...
எஸ்.சி., எஸ்.டி. இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் தாட்கோ நிறுவனம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விருப்பமுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து, ஆட்சியா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, தற்போது தாட்கோ நிறுவனம் சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினஇளைஞா்களுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி தொழில் நுட்ப பயிற்சி மற்றும் தொழில் உற்பத்தி பயிற்சியளிக்கப்படவுள்ளது.
ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்த 21 முதல் 30 வயது வரை உள்ளவா்களாகவும், 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவா்கள் இந்தப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.
இப்பயிற்சியை முழுமையாக நிறைவு செய்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன், வேலை வாய்ப்புக்கும் வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும்.
சென்னையில் தங்கிப் படிப்பதற்கு தேவையான வசதி மற்றும் உணவுக்கான செலவீனத்தை தாட்கோ ஏற்கும். விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.