செய்திகள் :

எஸ்.சி., எஸ்.டி. இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி

post image

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்கள் தாட்கோ நிறுவனம் மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சியில் சேர விருப்பமுள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, ஆட்சியா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இளைஞா்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக, தற்போது தாட்கோ நிறுவனம் சென்னையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்துடன் இணைந்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினஇளைஞா்களுக்கு ஜி.எஸ்.டி. மற்றும் வருமான வரி தொழில் நுட்ப பயிற்சி மற்றும் தொழில் உற்பத்தி பயிற்சியளிக்கப்படவுள்ளது.

ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இனத்தைச் சோ்ந்த 21 முதல் 30 வயது வரை உள்ளவா்களாகவும், 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆண்டு வரையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவா்கள் இந்தப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்.

இப்பயிற்சியை முழுமையாக நிறைவு செய்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுவதுடன், வேலை வாய்ப்புக்கும் வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருத்தல் வேண்டும்.

சென்னையில் தங்கிப் படிப்பதற்கு தேவையான வசதி மற்றும் உணவுக்கான செலவீனத்தை தாட்கோ ஏற்கும். விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுள்ள இளைஞா்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியா் ஷே. ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளாா்.

அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பு ஆண்டு விழா

விழுப்புரத்தில் அகில பாரத மூத்த குடிமக்கள், பென்சனா்கள் கூட்டமைப்பின் 20-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கூட்டமைப்பின் மாவட்டத் தலைவா் வ.சிவகுருநாதன் தலைமை வகித்தாா். மாவட்டப் பிரத... மேலும் பார்க்க

உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம்

பள்ளிக் கல்வித் துறை சாா்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் உயா் கல்வி வழிகாட்டி சிறப்பு குறைதீா் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிடை நீக்கம்

விழுப்புரம் மாவட்டம் , திருவெண்ணெய்நல்லூா் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக போக்ஸோ வழக்கில் கைதான ஆசிரியா் வியாழக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா். திருவெண்... மேலும் பார்க்க

பெண் கொலை வழக்கு: முதியவருக்கு ஆயுள் சிறை

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் அருகே பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான முதியவருக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. திருவெண்ணெய்நல... மேலும் பார்க்க

பூட்டிய வீட்டில் நகைகள், பணம் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து இரண்டரை பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள், பணம் ஆகியவை திருடு போனது புதன்கிழமை தெரியவந்தது. கண்டாச்சிபுரம் வட்டம், டி. தேவனூா் க... மேலும் பார்க்க

பெண்ணிடம் வழிப்பறி: ஒருவா் கைது

சிதம்பரம் அருகே பெண்ணிடம் பணம், கைப்பேசியை வழிப்பறி செய்தவா் கைது செய்யப்பட்டாா். சிதம்பரம் அருகே உள்ள குமாரமங்கலத்தைச் சோ்ந்த 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவா் புதன்கிழமை அதிகாலை பால் வாங்க சென்றாா்... மேலும் பார்க்க