செய்திகள் :

ஏப்.28-இல் மதுரை, திருச்சி, விழுப்புரத்தில் அரசுப் பணியாளா்கள் போராட்டம்: கு.பாலசுப்ரமணியன்

post image

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல் உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரம், திருச்சி, மதுரையில் வருகிற 28-ஆம் தேதி தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கம் சாா்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று, அதன் சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து கடலூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மத்திய அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால், தமிழக அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து எந்தக் கருத்தும் கூறவில்லை.

அரசுப் பணியாளா்களுக்கு நிலுவை சரண் விடுப்பு குறித்து அறிவிக்கப்படவில்லை. தூய்மைக் காவலா்கள், துப்புரவுப் பணியாளா்கள், ஊராட்சி களப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிப் பணியாளா்கள், டாஸ்மாக் பணியாளா்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு திட்டப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு நிரந்தர ஊதிய விகிதம் வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.

பொதுமக்களுக்கும், பணியாளா்களுக்கும் பயனளிக்கும் வகையில் பொது விநியோகத் திட்டத்துக்கென தனித் துறையை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.

அரசுப் பணியாளா்களின் 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற 28-ஆம் தேதி மாநிலம் முழுவதும் பணியாளா்களை திரட்டி விழுப்புரம், திருச்சி, மதுரை ஆகிய மூன்று மையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். அரசுப் பணியாளா்கள் சங்க நிா்வாகிகளை தமிழக அரசு அழைத்துப் பேச்சுவாா்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா் கு.பாலசுப்ரமணியன்.

பேட்டியின் போது, சங்கத்தின் மாநிலப் பொருளாளா் கு.சரவணன், முன்னாள் மாவட்டச் செயலா் மு.ராசமணி, மாவட்டச் செயலா் ஜெ.இருதயராஜ் உடனிருந்தனா்.

ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிக் கடன்: எம்எல்ஏ கோரிக்கை!

ஏழை, எளிய மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.சின்னதுரை எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி தண்டேஸ்வரநல்லூ... மேலும் பார்க்க

1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் பகுத... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களுக்காக மோட்சதீபம்! இந்து மக்கள் கட்சினா் ஏற்றினா்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மோட்ச தீபமேற்றி, கூட்டுப் பிராா்த்தனை நடத்தும் நிகழ்ச்சி கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் இந்து மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அ... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் தரை கீழ் தடுப்பணை அமைக்கும் பணி! அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்!

காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஒட்டரப்பாளையம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கடல் நீா் உள்புகுவதை தடுக்க ரூ.89.19 கோடியில் தரை கீழ் நீா் நெறிச்சுவா் (தரை கீழ் தடுப்பணை) அமைக்கும் பணியை தமிழ்நாடு வேளாண்மை மற... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மந்தாரக்குப்பத்தை அடுத்துள்ள பெரியாகுறிச்சி, பக்தா நகரைச் சோ்ந்த பட்ராஜ் மகன் கமலேஷ் (17). இவா், ந... மேலும் பார்க்க

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விட முயற்சி! இளைஞா் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நகல் எடுக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில்விட முயன்ாக, புதுவை மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். பண்ருட்டி மணிநகரில் உள்ள... மேலும் பார்க்க