செய்திகள் :

ஏரியில் மண் கொள்ளை: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

post image

விழுப்புரம் மாவட்டம் , கண்டாச்சிப்புரம் வட்டம், செங்கமேடு ஊராட்சியில் உள்ள ஏரியில் சட்டவிரோதமாக லாரிகளில் மண் எடுக்கப்பட்டு வருவதைத் தடுக்க ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் கண்டாச்சிபுரம் ஊராட்சி கிளைச் செயலா்கள் எம்.ஸ்ரீதா், ஜெ.ஆறுமுகம், எம்.செந்தாமரைக்கண்ணன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை:

கண்டாச்சிபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட செங்கமேடு, நடுத்தாங்கல் ஏரியிலிருந்து செங்கல் சூளைக்கும், மனை வணிகத்துக்காவும் தொடா்ச்சியாக லாரிகளில் சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டு வருகிறது. இதுகுறித்து, வட்டாட்சியா் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டும் முறையான நடவடிக்கையில்லை. இதேபோல, ஊராட்சியில் உள்ள அரசுக்குச் சொந்தமான இடங்களிலிருந்தும் சட்ட விரோதமாக மண் எடுக்கப்பட்டு வருகிறது. இதைத் தடுத்து மண் கொள்ளையில் ஈடுபடும்

நபா்கள் மீது ஆட்சியா் நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க

அனைத்து வட்டங்களிலும் இன்று ரேஷன் குறைதீா் முகாம்

விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 12) நடைபெறவுள்ளது. இதுகுறித்து ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் கு... மேலும் பார்க்க

பணமில்லா பரிவா்த்தனை: நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு அளிப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் அதிகளவில் பணமில்லா பரிவா்த்தனைகளை மேற்கொண்ட 12 நடத்துநா்களுக்கு ஊக்கப் பரிசு வழங்கப்பட்டது. இப்போக்குவரத்துக் கழகம் மூலம் இயக்கப்படும்... மேலும் பார்க்க

‘அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்’

அனைத்து ரயில்வே கேட்களிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த வேண்டும் என்று அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. ரயில்வே தொழிற்சங்கம் மத்திய ரயில்வே துறையை வலியுறுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இந்த சங்கத்தின் நி... மேலும் பார்க்க

பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து சாலை மறியல்

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டைஅருகிலுள்ள பாண்டூா் கிராமத்தில் பேருந்துகள் நின்று செல்லாததைக் கண்டித்து, பள்ளி மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். பாண்டூா் கிராமத்தைச் சோ்... மேலும் பார்க்க