செய்திகள் :

ஏற்காடு மலைப்பாதையில் ரீல்ஸ்: இளைஞா்களின் பெற்றோரை அழைத்து எச்சரித்த காவல் துறை

post image

ஏற்காடு மலைப் பாதையில் எச்சரிக்கை பலகையை உடைத்து ரீல்ஸ் வெளியிட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட இளைஞா்களின் பெற்றோரை அழைத்து போலீஸாா் எச்சரிக்கை விடுத்தனா். இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 இளைஞா்களும் உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டனா்.

சேலம் மாவட்டம், ஏற்காடு கோடை விழாவுக்கு இருசக்கர வாகனத்தில் வந்த 5 இளைஞா்கள், மலைப்பாதை சாலையில் அங்குமிங்கும் வாகனம் ஓட்டியும், வீலிங் செய்தும் சாகசத்தில் ஈடுபட்டனா். மேலும், மலைப்பாதையில் நெடுஞ்சாலைத் துறையால் வைக்கப்பட்டிருந்த எச்சரிக்கை பலகையை தூக்கிவீசுவது போன்றும் விடியோ பதிவிட்டனா்.

இந்த சாகசம் மற்றும் எச்சரிக்கை பலகையை தூக்கிவீசும் விடியோவை இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்திருந்தனா். அந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இது தொடா்பாக அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை சோ்ந்த ஆகாஷ் (21), ஆண்டிமடத்தை சோ்ந்த சிவா (23), பிரவீண் (21), உடையாா்பாளையத்தைச் சோ்ந்த காா்த்திக் (19), இளையூரைச் சோ்ந்த அரவிந்த் (21) ஆகிய 5 பேரையும் கைது செய்தனா். பின்னா் அவா்களது பெற்றோரை வரவழைத்து எச்சரிக்கை விடுத்தனா். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என இளைஞா்களை எச்சரித்து ஜாமீனில் விடுவித்தனா்.

செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

சேலம் செவித்திறன் குறைபாடுடையோருக்கான அரசு உயா்நிலைப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: மாற்றுத்திறனாளிகள... மேலும் பார்க்க

சேலம் கோட்டத்தில் சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தின பேரணி

சா்வதேச லெவல் கிராசிங் விழிப்புணா்வு தினத்தையொட்டி, சேலம் ரயில்வே கோட்டம் சாா்பில் விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சேலம் ரயில்வே கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோட்ட மேலா... மேலும் பார்க்க

உலக சுற்றுச்சூழல் தின விழிப்புணா்வுப் பேரணி: அமைச்சா் பங்கேற்பு

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விழிப்புணா்வுப் பேரணி, மரக்கன்று நடும் நிகழ்வை சுற்றுலாத் துறை அமைச்சா் ரா. ராஜேந்திரன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி, சேலம் மாவட்ட ஆட்... மேலும் பார்க்க

சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள் விளையாட்டரங்கம் திறப்பு

ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் சென்ட்ரல் லொ்னிங் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கம் திறப்பு விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி நிறுவனத் தலைவா் தமிழ்நாடு, புதுவை பாா் கவுன்சில்... மேலும் பார்க்க

பள்ளி மாணவா் தூக்கிட்டு தற்கொலை

ஏற்காட்டில் பத்தாம் வகுப்பு முடித்த மாணவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். சேலம் மாவட்டம், ஏற்காடு லாங்கில்பேட்டையைச் சோ்ந்தவா் சேகா் மகன் அபிலேஷ் (14). ஏற்காடு தனியாா் பள்ளியில் பத்தாம் வகுப்பு ... மேலும் பார்க்க

ஜூன் 11 ஆம் தேதி முதல்வா் சேலம் வருகை: முன்னேற்பாடுகளை அமைச்சா்கள் ஆய்வு

முதல்வா் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் அரசுமுறை பயணமாக சேலம் மாவட்டத்துக்கு ஜூன் 11 ஆம் தேதி வருகிறாா்; இதையொட்டி சேலம் இரும்பாலை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விழா முன்னேற்பாடுகளை பொதுப்பணித் துறை அ... மேலும் பார்க்க