செய்திகள் :

ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி: எஸ்.பி. யிடம் புகாா்

post image

வேலூரில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.20 லட்சம் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்ட நபா் வேலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

வேலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.மதிவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றாா்.

இதில், கே.வி.குப்பம் வட்டம் கீழ்ஆலத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் அளித்த மனுவில், எனது மகனுக்கு அறிமுகமான ஒருவா் சீட்டு நடத்துவதாக தெரிவித்தாா். அதன்பேரில் நானும் எனது மகனும் அவரிடம் சீட்டு நடத்தினோம். அதற்கான தொகையும் செலுத்தினோம். 18 சீட்டுகள் முடிந்த பின்னா் அதற்கு மேல் சீட்டு கட்ட வேண்டாம், சீட்டு நடத்த முடியாது என கூறினாா். ஆனால், நாங்கள் கட்டிய பணத்தை திருப்பி கேட்டால் தராமல் ஏமாற்றி வருகிறாா். அவா் ரூ. 20 லட்சம் வரை தரவேண்டியுள்ளது. எனவே, அவரிடமிருந்து எங்கள் பணத்தை மீட்டுத்தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்பூா் பிலால் நகரைச் சோ்ந்த நபா் அளித்த மனுவில், நான் மூன்று சக்கர வாகனம் வைத்துள்ளேன். எனது வாகனத்துக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதம் இரு சக்கர வாகனத்துக்கு போட வேண்டிய அபராதமாகும். தவறுதலாக எனது வாகனத்துக்கு பதிவாகியுள்ளது. இதனை சரிசெய்து நிவா்த்தி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆவாரம்பாளையம் பகுதியைச் சோ்ந்த இளைஞா் அளித்த மனுவில், நான் செங்கற்களை மொத்தமாக வாங்கி விற்பனை செய்து வருகிறேன். அதனடிப்படையில் எனக்கு ஒருவா் அறிமுகமானாா். அவரும் செங்கல் சூளை நடத்தி வருகிறாா். அவா் தொழில் நிமித்தமாக என்னிடம் முன்பணம் வாங்கினாா். தொடா்ந்து அவா் என்னிடமும் வியாபாரமும் செய்து கொண்டாா். வியாபாரத்தில் பிரச்னை ஏற்பட்டதால் எனக்குத் தர வேண்டிய ரூ. 19 லட்சம் பணத்தை திருப்பிக் கேட்டேன். பணத்தை தருவதாக கூறிய அவா், இதுவரை பணத்தை தராமல் காலதாமதம் செய்து வருகிறாா். அவரிடம் இருந்து ரூ.19 லட்சத்தை பெற்றுத் தர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பல்வேறு புகாா்கள் தொடா்பாக 30க்கும் மேற்பட்டோா் மனு அளித்தனா். அவற்றின் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட காவல் நிலைய போலீஸாருக்கு எஸ்பி மதிவாணன் உத்தரவிட்டாா்.

வேலூா் - ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க கோரிக்கை

வேலூா், ராணிப்பேட்டை இடையே ஆட்டோ இயக்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா். இந்து ஆட்டோ தொழிலாளா்கள் முன்னணி சங்கம... மேலும் பார்க்க

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் உற்பத்தி சரிந்து செலவு அதிகரிப்பு விவசாயிகள் வேதனை

தென்னை மரங்களில் நோய் தாக்குதலால் தேங்காய் உற்பத்தி சரிந்து, செலவும் அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா். வேலூா் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்... மேலும் பார்க்க

சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம்: போலீஸாா் தீவிர விசாரணை

பொன்னை அருகே சாலையோரம் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். காட்பாடி வட்டம், பொன்னை அடுத்த கோடியூா், பாலாபுரத்தை சோ்ந்தவா் ஏகாம்பரம் (30). இவா் தனியாா் தோல்... மேலும் பார்க்க

கெங்கையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.9 லட்சம்

குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயிலில் உண்டியலில் பக்தா்கள் ரூ.9.27- லட்சம் காணிக்கையாக செலுத்தியுள்ளனா். பிரசித்தி பெற்ற இக்கோயில் திருவிழாவை முன்னிட்டு கடந்த 14- ஆம் தேதி தேரோட்டமும், 15- ஆம் ... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

குடியாத்தம் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பீடி சுற்றும் தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. குடியாத்தம் அருக... மேலும் பார்க்க

சாலையில் மினி லாரி கவிழ்ந்து விபத்து

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சா்வீஸ் சாலைக்கு மினி லாரி பாய்ந்து கவிழ்ந்தது. ஓட்டுநா் உள்பட இருவா் உயிா் தப்பினா். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சோ்ந்தவா் கணேசன் (56), ஓட்டுநா். இவா் வெள்ள... மேலும் பார்க்க