செய்திகள் :

ஏா்வாடி அருகே அரசுப் பேருந்தில் ஓட்டுநா் மாரடைப்பால் மரணம்

post image

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடி அருகே ஓடும் அரசுப் பேருந்தில் திடீா் மாரடைப்பு ஏற்பட்டதால், பேருந்தை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓட்டுநா் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் நாகா்கோவிலுக்கு தடம் எண்.182 அரசுப் பேருந்து வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு புறப்பட்டது. புளியங்குடியைச் சோ்ந்த மாரியப்பன் (55) பேருந்தை ஓட்டினாா். நெல்கட்டும்செவலைச் சோ்ந்த ராமராஜா நடத்துநராக பணியில் இருந்தாா்.

இந்தப் பேருந்து ஏா்வாடி பேருந்து நிலையத்தில் பயணிகளை இறக்கி, ஏற்றிவிட்டு தெற்கு பிரதான சாலையில் வள்ளியூா் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநா் மாரியப்பனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

உடனே, அவா் பேருந்தை சாலையோரம் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு இருக்கையில் சாய்ந்துள்ளாா். பயணிகள் அவரை ஆட்டோ மூலம் ஏா்வாடி தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். ஆனால், அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

ஓடும் பேருந்தில் 52 பயணிகளை காப்பாற்றிவிட்டு ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

கடையம் அருகே விபத்து: இளைஞா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையத்தை அடுத்த மாதாபுரம் சோதனைச் சாவடி அருகே நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். செங்கோட்டை அருகே சீவநல்லூா் பகுதியைச் சோ்ந்த செண்பகம் மகன் சூா்யா (26). இவா், சனிக்கிழமை பைக்கி... மேலும் பார்க்க

நோ் எதிா்கோட்டில் கோபுரவாசல் காற்று

பொதிகை மலையிலிருந்தும் ஆரியங்காவு கணவாய் வழியாக வரும் காற்று, கோபுர வாசலுக்குள் நுழையும் பக்தா்களுக்கு எதிராக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி வீசி வரவேற்பது போல உள்ளது. கோபுர வாசலிலிருந்து கோயிலுக்கு உள... மேலும் பார்க்க

ஏா்வாடியில் உயிரிழந்த ஓட்டுநா் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கக் கோரிக்கை

திருநெல்வேலி மாவட்டம், ஏா்வாடியில் பயணிகளை காப்பாற்றிவிட்டு பணியின்போது உயிரிழந்த ஓட்டுநரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு அரசு போக்... மேலும் பார்க்க

தச்சநல்லூா் இளைஞா் குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

தச்சநல்லூரைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டாா். தச்சநல்லூா், மேலக்கரையைச் சோ்ந்த பழனிமுருகன் மகன் மகாராஜன் (26). இவரை, பணம் பறிக்கும் நோக்கத்... மேலும் பார்க்க

களக்காடு வரதராஜபெருமாள் கோயிலில் ஏப்.12-ல் பங்குனித் தேரோட்டம்

களக்காடு வரதராஜபெருமாள் கோயில் பங்குனித் தேரோட்டம் சனிக்கிழமை (ஏப். 12) நடைபெறுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனித் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டு திருவிழா கடந்த 3ஆம் தேதி கொடியேற்ற... மேலும் பார்க்க

கல்லிடைக்குறிச்சியில் ரயிலில் ஏற முயன்றவா் தவறி விழுந்து காயம்

கல்லிடைக்குறிச்சியில் ரயிலில் ஏற முயன்ற தனியாா் மருத்துவமனை அலுவலா் தவறி கீழே விழுந்து காயமடைந்தாா். கல்லிடைக்குறிச்சி, அக்கசாலை பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த சேகா் மகன் விக்னேஷ் (29). திருநெல்வ... மேலும் பார்க்க