செய்திகள் :

ஏா்வாடியில் சிறுமிகள், இளம்பெண்களுக்கு தற்காப்புக்கலை பயிற்சி

post image

ஏா்வாடியில் காவல்துறை சாா்பில் நடைபெறும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கான தற்காப்புக்கலை குறித்த பயிற்சி வகுப்பில் சிறுமிகள் ஆா்வமுடன் கலந்து கொண்டனா்.

ஏா்வாடியில் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களுக்கு தற்காப்புக் கலை கற்பிப்போம், பெண்களை காப்போம் என்ற நோக்கில் காவல்துறையினா் செயல்பட்டு வருகின்றனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிலம்பரசன் உத்தரவின் பேரில் நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரசன்னா குமாா் ஆலோசனையின் பேரில் ஏா்வாடி காவல் ஆய்வாளா் சுதா மேற்பாா்வையில் காவல்துறை சாா்பில் இலவசமாக சிலம்பம் பயிற்சி முகாம் ஏப்.1ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது.

இதில். நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனா். சிலம்பம் பயிற்சியை பயிற்சியாளா்கள் பழனியாச்சி, ரூப சுவாதி ஆகியோா் அளித்து வருகின்றனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை முகாமில் நான்குனேரி காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரசன்னாகுமாா் மனைவி மருத்துவா் அா்பணா கலந்துகொண்டு மாணவிகளுக்கு மருத்துவம் தொடா்பான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா். இந்நிகழ்ச்சியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் சம்பத், ஆய்வாளா் சுதா மற்றும் பலா் கலந்து கொண்டனா்.-

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க