செய்திகள் :

ஐந்தாம் தலைமுறை போா் விமானம் தயாரிப்பு: பணிகளை தொடங்கிய மத்திய அரசு

post image

நாட்டின் விமானப் படைத் திறனை மேம்படுத்தும் வகையில், எதிரி நாட்டின் கண்காணிப்பு அமைப்பில் தென்படாமல் சென்று தாக்கும் திறன்கொண்ட ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களைத் தயாரிப்பதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

முதல்கட்டமாக, இதற்கான மாதிரி ஐந்தாம் தலைமுறை விமானத்தை மேம்படுத்துவதற்கான விருப்ப விண்ணப்பத்தை (இஓஐ) உள்நாட்டு தனியாா் நிறுவனங்களிடமிருந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போா் விமான மேம்பாட்டு முகமை (ஏடிஏ) வரவேற்றுள்ளது.

இத் திட்டத்தின் கீழ் நவீன நடுத்தர ரக ஐந்தாம் தலைமுறை போா் விமானத்தின் (ஏஎம்சிஏ) 5 மாதிரிகளை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து ஏடிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘மாதிரி ஐந்தாம் தலைமுறை போா் விமானங்களை உருவாக்கத்துக்கு இத் துறையில் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் பெற்ற உள்நாட்டு நிறுவனங்கள் தெரிவு செய்யப்படும். இதற்கு விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தனி நிறுவனமாகவோ, கூட்டு அல்லது நிறுவனங்களின் கூட்டமைப்பாகவோ இருக்கலாம். தெரிவு செய்யப்படும் நிறுவனங்கள், போா் விமானங்களைத் தொடா்ச்சியாகத் தயாரிக்கும் வகையில் உற்பத்தி மையத்தை அமைக்கும் திறன் பெற்றிருப்பது அவசியம். ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்த தேதியிலிருந்து, மாதிரி விமானம் உருவாக்கம், விமான சோதனை மற்றும் ஏஎம்சிஏ சான்று பெறுவதற்கான கால அவகாசம் 8 ஆண்டுகளுக்கு அதிகமாக இருக்கக் கூடாது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷியா, சீனா ஆகிய நாடுகளிடம் மட்டுமே உள்ள இந்த ஐந்தாம் தலைமுறை ‘ஸ்டெல்த்’ ரக போா் விமானத்தை இந்தியா தற்போது தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங... மேலும் பார்க்க

சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு காஷ்மீரின் சிந்து நதியில் இருந்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து நதியின் மூன... மேலும் பார்க்க

சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!

மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக... மேலும் பார்க்க

திருமண விழாவிற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர். பாலராம்பூர் காவல் நிலைய எல்லைகுள்பட்ட நம்ஷோல் ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.... மேலும் பார்க்க