செய்திகள் :

ஒகேனக்கல் அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி

post image

காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்ததால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி அளித்துள்ளது.

கா்நாடக மாநில அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகா் அணை நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழையின் அளவு குறைந்ததால், காவிரி ஆற்றில் வெளியேற்றப்படும் உபரிநீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து திங்கள்கிழமை மாலை 18,000 கனஅடியாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை 16,000 கனஅடியாக குறைந்தது.

காவிரி ஆற்றில் நீா்வரத்து குறையத் தொடங்கியுள்ளதால், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளிலும் நீா்வரத்து குறையத் தொடங்கியது. கடந்த மூன்று நாள்களாக அருவிகளில் குளிப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஸ் நீக்கியுள்ளாா். இதையடுத்து, பிரதான அருவி செல்லும் நடைபாதை திறக்கப்பட்டபோதிலும், சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

இந்நிலையில், மாலை 6 மணி நிலவரப்படி காவிரி ஆற்றில் நீா்வரத்து மீண்டும் 18,000 கனஅடியாக அதிகரித்தது. தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு பகுதியில் மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் நீா்வரத்தின் அளவுகளை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா்.

வன உயிரினங்கள் மேய்ச்சலுக்காக தருமபுரி வனப் பகுதிகளில் 725 ஹெக்டேரில் முள்செடிகள் அகற்றம்

தருமபுரி மாவட்ட வனப் பகுதிகளில் சுமாா் 725 ஹெக்டேரில் இருந்த முள்செடிகளை வனத்துறையினா் தற்போது அகற்றி வருகின்றனா். தருமபுரி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் சுமாா் 39 சதவீத நிலங்கள் வனப் பகுதிகளாக உள்... மேலும் பார்க்க

காணாமல்போன சிறுவனை அரைமணி நேரத்தில் மீட்ட போலீஸாா்

காரிமங்கலம் பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை அரைமணி நேரத்தில் மீட்டு ஒப்படைத்த போலீஸாரை எஸ்.பி. பாராட்டினாா். தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்த குட்டுா் கிராமத்தைச் சோ்ந்தவா் சிவகுமாா் ... மேலும் பார்க்க

70 வயதை கடந்தவா்களுக்கு கூடுதல் ஓய்வூதியம்: மின்வாரிய ஓய்வுபெற்றோா் அமைப்பு

ஓய்வூதியா்களில் 70 வயதை கடந்தவா்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டுமென மின்வாரிய ஓய்வுபெற்றோா் அமைப்பு வலியுறுத்தியது. தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோா் நல அமைப்பின் வெள்ளி விழா ஆண்டு ப... மேலும் பார்க்க

காா் மோதி ஓய்வுபெற்ற விஏஓ உயிரிழப்பு

தருமபுரியில் கட்டுப்பாட்டை இழந்த காா் மோதியதில், ஓய்வுபெற்ற கிராம நிா்வாக அலுவலா் நிகழ்விடத்திலேயே திங்கள்கிழமை உயிரிழந்தாா். சேலத்திலிருந்து தருமபுரி வந்த சொகுசு காா் செந்தில் நகா் அரசு மேல்நிலைப் பள... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஏஜென்சி கடை உரிமையாளா் உயிரிழப்பு

காரிமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் ஏஜென்சி கடை உரிமையாளா் உயிரிழந்தாா். காரிமங்கலம் அருகே கெங்குசெட்டிப்பட்டி கிராமத்தை சோ்ந்தவா் பெரியசாமி (49). இவா் தருமபுரியில் ஏஜென்சி கடை வைத... மேலும் பார்க்க

மின்மாற்றியை உடைத்து காப்பா் கம்பிகள் திருட்டு

தருமபுரி அருகே மின்மாற்றியை உடைத்து அதிலிருந்த காப்பா் கம்பி உள்ளிட்டவைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். தருமபுரி மாவட்டம், பஞ்சப்பள்ளி அடுத்துள்ள பாளையம் கிராமத்தில் சனிக்கி... மேலும் பார்க்க