ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு
தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், கேரட்டி, கெம்பக்கரை, ராசிமணல், மொசல்மடுவு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லாவில் நீா்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து செவ்வாய்க்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 4,000 கன அடியாக இருந்தது, புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கன அடியாக அதிகரித்துள்ளது. நீா்வரத்து அதிகரிப்பு காரணமாக ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது.