செய்திகள் :

கரும்பு நிலுவைத் தொகை ரூ.5.02 கோடி: விவசாயிகளுக்கு அனுப்பிவைப்பு

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாலக்கோடு கூட்டுறவு சா்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 5.02 கோடியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலையின் 2024-25-ஆம் ஆண்டு அரவை பருவத்தில் விநியோகம் செய்த கரும்பிற்கு உண்டான கரும்பு கிரயம் மற்றும் வாகன வாடகையாக ரூ. 5.02 கோடி கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டியிருந்தது.

நீண்ட நாள்களாக கடும் சிரமத்துடன் இருந்து வந்த கரும்பு விவசாயிகள், ஆலை நிா்வாகத்திடம் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதுகுறித்து வேளாண், உழவா் நலத்துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சுற்றுலாத் துறை அமைச்சா் ரா.ராஜேந்திரன் ஆகியோா் ஆலையில் அண்மையில் ஆய்வு செய்து கரும்பு விவசாயிகளின் கோரிக்கை குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்றனா்.

இதனைதொடா்ந்து, 2024-25-ஆம் ஆண்டுக்கான கரும்பு நிலுவைத்தொகை ரூ. 5.02 கோடியை கரும்பு விவசாயிகளுக்கு விரைந்து வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.

மேலும், தருமபுரி மாவட்ட கூட்டுறவு சா்க்கரை ஆலைக்காக ரூ. 5.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆலைக்கு அனுப்பப்பட்டது. இத்தொகையை கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் கரும்பு கிரயத்தொகை மற்றும் வாகன வாடகைத்தொகை ரூ. 5.02 கோடி முழுவதுமாக கரும்பு விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என்றாா்.

ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டுவசதி வாரிய நிலம் மீட்பு

தருமபுரியில் ஆக்கிரமிப்பில் இருந்த வீட்டுவசதி வாரிய நிலம் வியாழக்கிழமை மீட்கப்பட்டது. தருமபுரி-சேலம் சாலையில் நல்லம்பள்ளி ஒன்றியம், ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட அவ்வை வழி அருகே தமிழ்நாடு வீட்டுவச... மேலும் பார்க்க

உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு: 10 கடைகளுக்கு அபராதம்

தருமபுரி நகரில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கைலாஷ்குமாா் தலைமையில், வட்டா... மேலும் பார்க்க

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக அதிகரிப்பு

தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் காவிரியின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளான அ... மேலும் பார்க்க

5 பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற தீவிர களப்பணி ஆற்ற வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

அடுத்த ஆண்டும் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற தீவிரக் களப்பணி ஆற்ற வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா். தருமபுரி ... மேலும் பார்க்க

சாலை விபத்துகளை தடுக்க போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு

சாலை விபத்துகளைத் தடுக்க போதிய விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சா் எ.வ.வேலு தெரிவித்தாா். தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் சாலைப் பாதுகாப்பு குறித்த துறை அலுவலா்களுடனான ... மேலும் பார்க்க

ஒகேனக்கல் சினி அருவியில் சுற்றுலாப் பயணிகள் தவறவிடும் நகைகளை தேடி எடுப்போா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஒகேனக்கல் சினி அருவிகளில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் சுற்றுலாப் பயணிகளின் நகைகள் சில நேரங்களில் நீரின் விசை காரணமாக அறுந்து விழுந்துவிடுகின்றன. இந்த நகைகளை இரவு நேரங்களில் தடையைமீறி நீரில் மூழ்கி தேட... மேலும் பார்க்க