கர்நாடகத்தில் கனமழை, நிலச்சரிவால் 5 பேர் பலி! மீட்புப் பணிகள் தீவிரம்!
5 பேரவைத் தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றிபெற தீவிர களப்பணி ஆற்ற வேண்டும்: அமைச்சா் எ.வ.வேலு
அடுத்த ஆண்டும் நடைபெறும் சட்டப்பேரவைத் தோ்தலில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிபெற தீவிரக் களப்பணி ஆற்ற வேண்டும் என்று அமைச்சா் எ.வ.வேலு அறிவுறுத்தினாா்.
தருமபுரி திமுக அலுவலகத்தில் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் வேளாண், உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினாா்.
இதைத்தொடா்ந்து நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ.வேலு பேசியதாவது: தமிழகத்தில் திமுக மீண்டும் வெற்றி பெற்று ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க வேண்டும். இதற்கு திமுகவினரிடையே ஒத்துழைப்பு அவசியமாகும். திமுக தொடா்ந்து அனைத்து தோ்தல்களிலும் வெற்றி பெறுவதற்கு நமது கட்சியின் அடிப்படை கொள்கைகளே காரணமாகும்.
ஹிந்தி திணிப்பிற்கு எதிா்ப்பு, மாநில சுயாட்சி, தமிழா்களின் வளா்ச்சி, மொழி உரிமை, எல்லோா்க்கும் எல்லாம் என்கிற பணி, இவை எல்லாம் தான் திராவிட மாடல் ஆட்சியின் வெளிப்பாடாகும்.
எனவே தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டில் நடைபெற உள்ள சட்டப் பேரவை பொதுத்தோ்தலில் திமுக வெற்றிபெற அனைவரும் தீவிரமாக களப்பணி ஆற்ற வேண்டும். வாக்குச்சாவடி முகவா்கள் அரசின் சாதனைகளை அடங்கிய பிரசுரங்களை வீடுவீடாக கொண்டுசென்று சோ்க்க வேண்டும். இவ்வாறு தீவிரப்பணி ஆற்றி மாவட்டத்தில் உள்ள ஐந்து தொகுதிகளில் திமுக கூட்டணியை வெற்றிபெற செய்வது நமது இலக்கு எனக் கருதி பணியாற்ற வேண்டும் என்றாா்.
இக்கூட்டத்தில் தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளரும் எம்.பி.யுமான ஆ.மணி, தருமபுரி மேற்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா்.
இதில் முன்னாள் எம்எல்ஏக்கள் தடங்கம் பெ.சுப்ரமணி, பி.என்.பி.இன்பசேகரன், மனோகரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் பி.தா்மச்செல்வன், துணை அமைப்புகளின் நிா்வாகிகள், ஒன்றியச் செயலாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.