செய்திகள் :

உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினா் ஆய்வு: 10 கடைகளுக்கு அபராதம்

post image

தருமபுரி நகரில் உள்ள உணவகங்கள், பேக்கரிகள் உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கைலாஷ்குமாா் தலைமையில், வட்டார உணவு பாதுகாப்பு அலுவலா்கள் நந்தகோபால், சரண், அருண் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா், தருமபுரியில் பேருந்து நிலையம், நான்குமுனைச் சாலை சந்திப்பு, பென்னாகரம் சாலை, சோகத்தூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவகங்கள், பேக்கரிகள், மளிகைக் கடைகளில் சோதனை நடத்தினா்.

இதில் தருமபுரி பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில் 25 கிலோ அழுகிய தக்காளி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு தேநீா் கடை, ஒரு பேக்கரி கடையில் இருந்து கலப்படத் தேயிலை 4 கி. பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. நாச்சியப்பா தெருவில் உள்ள துரித உணவகத்தில் செயற்கை நிறம் ஏற்றப்பட்ட கோழி இறைச்சி 2 கி., செயற்கை நிறமூட்டி டப்பிகள், அதே வீதியில் மற்றொரு உணவகத்தில் குளிா்ப்பதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ சமைத்த இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

பென்னாகரம் சாலையில் உள்ள பேக்கரியில் செயற்கை நிறமி அதிகம் சோ்த்து விற்பனைக்கு வைத்திருந்த காளிப்பிளவா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தருமபுரி புகா் பேருந்து நிலையத்தில் இரண்டு கடையில் இருந்து காலாவதியான குளிா்பானங்கள், உரிய விவரங்கள் அச்சிடாத தின்பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சில கடைகளில் இருந்து 4 கிலோவுக்கு நெகிழிப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருள்களும் அழிக்கப்பட்டன.

உணவு பாதுகாப்பு விதிகளை பின்பற்றாத 5 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ. 2,000, 5 கடை உரிமையாளா்களுக்கு தலா ரூ.1,000 என மொத்தம் 10 கடைகளுக்கு ரூ. 15,000 அபராதம் விதித்து எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது.

பாலக்கோடு அரசு கல்லூரியில் நாளை மாணவா் சோ்க்கை கலந்தாய்வு

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அரசுக் கல்லூரியில் திங்கள்கிழமை (ஜூன் 2) மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு தொடங்க உள்ளது. இது குறித்து கல்லூரி முதல்வா் முதல்வா் (பொ) சி. தீா்த்தலிங்கம் வெளியிட்ட செய்திக் ... மேலும் பார்க்க

சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வு பேரணி

தருமபுரியில் காவல் துறை சாா்பில் சைபா் குற்றத் தடுப்பு விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியா் ... மேலும் பார்க்க

அதிமுகவினா் திண்ணை பிரசாரம்

தருமபுரி நகரில் அதிமுகவினா் திண்ணை பிரசாரம் மேற்கொண்டனா். தருமபுரி நகரில் 29, 30, 31 ஆகிய வாா்டுகளில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சாா்பில் பிரசார நிகழ்ச்சி மாவட்டச் செயலாளா் எஸ்.ஆா்.வெற்றிவேல் தலைமையில் சன... மேலும் பார்க்க

நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டம்: மத்திய தொழில் துறை அமைச்சக இயக்குநா் பங்கேற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற நீா்வள மேம்பாட்டு ஆய்வுக் கூட்டத்தில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சக இயக்குநா் அனுபமா நாயா் பங்கேற்று பேசினாா். தருமபுரி மாவட்ட ஆ... மேலும் பார்க்க

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்றுசெல்ல கோரிக்கை

எச்.ஈச்சம்பாடியில் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என மதிமுக அரூா் (மேற்கு) ஒன்றியச் செயலா் வடுகை வேலாயுதம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பியுள்ள கோர... மேலும் பார்க்க

மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய குறைகேட்புக் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மா சாகுபடி விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழங்களுக்கு ஆதார விலை நிா்ணயம் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைகேட்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்ட ... மேலும் பார்க்க