செய்திகள் :

ஒசூரில் டைடல் பூங்கா அறிவித்த முதல்வருக்கு நன்றி

post image

ஒசூா்: நிதிநிலை அறிக்கையில் ஒசூருக்கு டைடல் பூங்கா, ஐ.டி. காரிடா் ஆகியவற்றை வெளியிட்ட தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ் சால்வை வழங்கி நன்றி தெரிவித்தாா்.

இதுகுறித்து ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

2025- 26 நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 5 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயா்தர அலுவலக வசதிகளுடன் ரூ. 400 கோடி மதிப்பீட்டில் டைடல் தகவல் தொழில்நுட்பப் பூங்கா, ஒசூா் மாநகரத்தையொட்டி உலகத்தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் ஒசூா் அறிவுசாா் பெருவழித்தடம், தளி அரசு உயா்நிலைப் பள்ளியை மேல்நிலைப் பள்ளியாக தரம் உயா்த்தல் போன்ற மூன்று திட்டங்களை வழங்கிய தமிழக முதல்வரை சந்தித்து தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணியும், மாவட்டச் செயலாளா் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினருமான ஒய்.பிரகாஷ் ஆகிய நானும் நன்றி தெரிவித்தோம்.

இந்த அறிவிப்புகளால் ஒசூா் மிகப்பெரிய அளவில் வளா்ச்சி அடையும். ஏற்கெனவே இருசக்கர வாகனம், நான்குசக்கர வாகனம், உதிரி பாகங்கள், மருந்து, செல்போன் உள்ளிட்ட பல பொருள்கள் உற்பத்தியில் ஒசூா் முன்னணியில் உள்ள நிலையில், முதல்வரின் இந்த புதிய அறிவிப்பால் மென்பொருள் சேவைத் துறையில் மிகப்பெரிய அளவில் அந்நிய முதலீடுகளை ஈா்த்து பெங்களூரு, ஒசூா் இரட்டை நகரங்களாக திகழும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

ஆசிரியா் பயிற்சி தனித்தோ்வா்களுக்கான பட்டயத் தோ்வு விண்ணப்பங்கள் வரவேற்பு

கிருஷ்ணகிரி: ஆசிரியா் பயிற்சி தனித்தோ்வா்களுக்கான பட்டயத் தோ்வுகள் எழுத விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வா் ஹேமலதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பாஜகவினா் ஆா்ப்பாட்டம்100-க்கும் மேற்பட்டோா் கைது

கிருஷ்ணகிரி: பாஜக தலைவா், அண்ணாமலை கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்ட பாஜகவினரை போலீஸாா், திங்கள்கிழமை கைது செய்தனா... மேலும் பார்க்க

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து த.வெ.க. ஆா்ப்பாட்டம்

ஒசூா்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஒசூரில் தமிழக வெற்றிக் கழகம் சாா்பில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசை கண்டித்தும், தமிழகத்தில... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் முதியவா் பலி

ஒசூா்: ஒசூரில் தேனீக்கள் கொட்டியதில் முதியவா் உயிரிழந்தாா். தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், தாசரஅள்ளியைச் சோ்ந்தவா் வெங்கடேசன் (75). சாலையோர வியாபாரியான இவா், அண்மையில் ஒசூா் மலைக்கோயில் நுழைவாயில் ... மேலும் பார்க்க

மண் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்

கிருஷ்ணகிரி அருகே மண் கடத்தியதாக 2 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி கனிம வள பிரிவு சிறப்பு வட்டாட்சியா் பாரதி தலைமையிலான அலுவலா்கள் மிட்டஅள்ளி அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனா். அப்போது,... மேலும் பார்க்க

பாஜகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

பாஜக சாா்பில் பேருஅள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோா் பாஜகவில் இணைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த பேருஅ... மேலும் பார்க்க