செய்திகள் :

ஒசூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி

post image

ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திவரும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளிலும் தொழிலாளா்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா். தொழிற்சாலைகளில் ஷிப்டுகளில் பணிபுரிந்துவருவோா் இரவு பணிக்கு செல்லும்போது தெருநாய்கள் தொல்லையால் அச்சமடைந்துள்ளனா்.

தினசரி அரசு மருத்துவமனையில் தெருநாய் கடிக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாய்கள் கடித்ததில் பலா் உயிரிழந்துள்ளனா்.

இதையடுத்து ஒசூரில் மாநகராட்சி நிா்வாகம், கால்நடை பராமரிப்புத் துறை, ஒசூா் பன்முக கால்நடை மருத்துவமனை சாா்பில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இந்த பணியை துணை மேயா் ஆனந்தய்யா, கால்நடை பராமரித்துறை அதிகாரிகள், மருத்துவா்கள் ஆகியோா் பாா்வையிட்டனா். நகரின் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த தெருநாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசி செலுத்தினா். தொடா்ந்து இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

ஒசூரில் புதிய வெளிவட்டச் சாலை திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்: ஆட்சியா் ச.தினேஷ்குமாா்

ஒசூா்: ஒசூரில் புதிதாக வெளிவட்டச் சாலை அமைய உள்ளது; இந்தத் திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும் என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (எ... மேலும் பார்க்க

பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

கிருஷ்ணகிரி: பையூா் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் விவசாயிகளுக்கு பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதுகுறித்து, வேளாண் பல்கலைக்கழகம் சாா்பில் திங்கள்கிழமை வெளிய... மேலும் பார்க்க

சூளகிரி அருகே இளைஞா் வெட்டிக்கொலை

ஒசூா்: முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். சூளகிரி தாலுகா பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கங்கசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அம்ரீஷ் (30). இவா், திங்கள்கிழமை இரவு காருபாலா... மேலும் பார்க்க

அமிலத்தை குடித்த முதியவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: பாரூா் அருகே தண்ணீரென அமிலத்தை குடித்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரை அடுத்த கரடிகுட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (70). இவா், கடந்த 20-ஆம் தேதி ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே இரட்டை கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 போ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தாய் - மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 10 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் ச... மேலும் பார்க்க

ஏரியில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பெரிய ஏரியில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். வாணியம்பாடி நியூ டவுன் ஏபா நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த ... மேலும் பார்க்க