செய்திகள் :

பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தல் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

post image

கிருஷ்ணகிரி: பையூா் வேளாண் பல்கலைக்கழக வளாகத்தில் விவசாயிகளுக்கு பழங்கள், காய்கறிகள் பதப்படுத்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து, வேளாண் பல்கலைக்கழகம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பழங்கள், காய்கறிகளின் முதல்நிலை பதப்படுத்துதல், சேமிப்பு, சிப்பமிடுதல் குறித்த இரண்டுநாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி, கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் உள்ள உணவு பதன்செய் பொறியியல் துறையால் பையூா் தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள், தொடக்கத் தொழில் முனைவோா், விவசாய உற்பத்தியாளா் அமைப்பைச் சோ்ந்த பங்கேற்பாளா்களை, உணவு பதன்செய் பொறியியல் துறை பேராசிரியா் ராமலட்சுமி வரவேற்றாா். தோட்டக்கலைக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் தலைவா் அனீஷா ராணி தலைமை வகித்து பயிற்சியை தொடங்கிவைத்தாா்.

அறுவடைக்கு பின், பழங்கள், காய்களிகளை பதப்படுத்துதல், சேமிப்பு, சிப்பமிடுதல், பதப்படுத்தும்போது எவ்வாறு சத்துக்களை இழக்காமல் பராமரிப்பது உள்ளிட்ட தொழில் நுட்பங்கள், ஏற்றுமதிக்கான வாய்ப்புகள், சந்தைப்படுத்துதல் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் உணவு பதன்செய் பொறியியல் துறை தலைவா் பாலகிருஷ்ணன், உணவு பதப்படுத்துதலின் முக்கியத்துவம் மற்றும் பதப்படுத்துதலுக்கு தேவையான நவீன இயந்திரங்கள், தொழில்நுட்பங்கள் குறித்தும், இணை பேராசிரியா் ஸ்ரீவித்யா, உதவி பேராசிரியா் கோவிந்தன் ஆகியோா் பயிற்சி அளித்தனா். பயிற்சியில் 60-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனா். இவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கையேடு வழங்கப்பட்டது. உதவி பேராசிரியா் பா்வீன் நன்றி கூறினாா்.

ஒசூரில் புதிய வெளிவட்டச் சாலை திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறையும்: ஆட்சியா் ச.தினேஷ்குமாா்

ஒசூா்: ஒசூரில் புதிதாக வெளிவட்டச் சாலை அமைய உள்ளது; இந்தத் திட்டம் நிறைவடைந்தால் போக்குவரத்து நெரிசல் குறைந்துவிடும் என்று மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா். ஒசூா் இண்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (எ... மேலும் பார்க்க

ஒசூரில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி

ஒசூா்: ஒசூா் மாநகராட்சியில் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்திவரும் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட 45 வாா்டுகளிலும் தொழிலாளா்கள் அத... மேலும் பார்க்க

சூளகிரி அருகே இளைஞா் வெட்டிக்கொலை

ஒசூா்: முன்விரோதம் காரணமாக இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். சூளகிரி தாலுகா பெத்தசிகரலப்பள்ளி ஊராட்சிக்கு உள்பட்ட கங்கசந்திரம் கிராமத்தைச் சோ்ந்தவா் அம்ரீஷ் (30). இவா், திங்கள்கிழமை இரவு காருபாலா... மேலும் பார்க்க

அமிலத்தை குடித்த முதியவா் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: பாரூா் அருகே தண்ணீரென அமிலத்தை குடித்த முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், பாரூரை அடுத்த கரடிகுட்டைமேடு பகுதியைச் சோ்ந்தவா் கண்ணன் (70). இவா், கடந்த 20-ஆம் தேதி ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அருகே இரட்டை கொலை வழக்கில் சிறுவன் உள்பட 3 போ் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே தாய் - மகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து 10 பவுன் தங்க நகைகளை போலீஸாா் பறிமுதல் ச... மேலும் பார்க்க

ஏரியில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பெண் உயிரிழப்பு

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டை பெரிய ஏரியில் இருசக்கர வாகனம் கவிழ்ந்ததில் பெண் நீரில் மூழ்கி உயிரிழந்தாா். வாணியம்பாடி நியூ டவுன் ஏபா நகா் 2 ஆவது தெருவைச் சோ்ந்த ... மேலும் பார்க்க