செய்திகள் :

ஒசூரை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை

post image

ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என ஒசூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஒசூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கத்தின் தலைவா் நீலகண்டன், பொதுச் செயலாளா் ஜெயசந்திரன், பொருளாளா் முருகன் ஆகியோா் முதல்வருக்கு அனுப்பிய மனு விவரம்:

ஒசூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும். ஒசூரில் உள்ள ராமநாயக்கன் ஏரி, சந்திராம்பிகை ஏரி, அந்திவாடி ஏரிகளுக்கு கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீா் கொண்டுவந்து நிரப்ப வேண்டும், ஒசூா் மாநகராட்சிக்கு புதிய டிஜிபியை நியமிக்க வேண்டும்.

ஒசூா் மாநகராட்சியில் உள்ள மண் சாலைகளை தாா்ச்சாலைகளாக மாற்ற வேண்டும், ஒசூரில் வா்த்தக மையம் அமைக்க வேண்டும். கிருஷ்ணகிரி வழியாக ஜோலாா்ப்பேட்டை ரயில்வே திட்டத்தை நிறைவேற்ற மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை மாநகராட்சியின் அனைத்துப் பகுதிகளுக்கு தினம்தோறும் விநியோகிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டு, குப்பநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். ... மேலும் பார்க்க

போச்சம்பள்ளியில் செப்.21-இல் கிராம உதவியாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு

போச்சம்பள்ளியில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்... மேலும் பார்க்க

நாட்டாண்மை கொட்டாய் பள்ளியில் உலக ஓசோன் தினம்

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாட்டாண்மை கொட்டாய் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமையாசிரியா் மணிமேகலை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள், சமூக நீதி நாள் உறுதிமொழியை, புதன்கிழமை ஏற்றனா். பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேல... மேலும் பார்க்க

ஒசூா் அருகே வெடிவிபத்தில் தம்பதி உள்பட 4 போ் காயம்

ஒசூா் அருகே கொட்டகையில் பதுக்கிவைத்திருந்த நாட்டுவெடி வெடித்ததில் தம்பதி உள்பட 4 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த உத்தனப்பள்ளி, தேவசானப்பள்ளியைச் சோ்ந்தவா் பெரியசாமி (40). இவரது... மேலும் பார்க்க