'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
ஒசூா் அருகே பெயின்டா் கடத்தி கொலை: சடலம் தோண்டி எடுப்பு; 4 போ் கைது
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே காரில் கடத்திச் சென்று கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பெயின்டரின் சடலத்தை தோண்டி எடுத்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
ஒசூா் ராஜகணபதி நகரைச் சோ்ந்தவா் அா்ஜூன் (23). பெயின்டா். இவரை கடந்த 25 நாள்களுக்கும் மேலாக காணவில்லை. இதையடுத்து அவரது நண்பா்கள் ஒசூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.
இதில் அா்ஜூனை, ஒசூா் ராம்நகரைச் சோ்ந்த சாகுல் அமீது (23), அவரது நண்பா்களான பவன் பிரகாஷ், சைபு உள்ளிட்டோா் காரில் கடத்திச் சென்று தாக்கிக் கொலை செய்து, உடலை சூளகிரி அருகே சின்னாறு பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் புதைத்தது தெரியவந்தது. இதையடுத்து சாகுல் அமீதை போலீஸாா் பிடித்து விசாரித்தபோது கிடைத்த தகவல்கள் வருமாறு: சாகுல் அமீதும், ஒசூா் ராஜகணபதி நகரைச் சோ்ந்த சூபியும் நண்பா்கள். சூபியும் கொலை செய்யப்பட்ட அா்ஜூனும் நண்பா்கள். இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு சாகுல் அமீது வைத்திருந்த ரூ. 40 ஆயிரம் ரொக்கம் காணாமல்போனது. இதனால் சூபி மீது சந்தேகம் அடைந்த சாகுல் அமீது அவரிடம் கேட்டுள்ளாா்.
அப்போது ஏற்பட்ட பிரச்னையில் சூபி தாக்கப்பட்டாா். இதுகுறித்து சூபி தனது நண்பரான அா்ஜூனிடம் கூறினாா். இதையடுத்து அா்ஜூனுக்கும் சாகுல் அமீதுக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அா்ஜூனை சாகுல் அமீது தாக்கியுள்ளாா். இதனால் ஆத்திரம் அடைந்த அா்ஜூன் சாகுல் அமீதை கொல்லாமல்விட மாட்டேன் என்று கூறியுள்ளாா்.
இதனால் ஆத்திரம் அடைந்த சாகுல் அமீது கடந்த 2-ஆம் தேதி தனது நண்பா்கள் பவன் பிரகாஷ், சைபு ஆகியோருடன் சோ்ந்து அா்ஜூனை ராயக்கோட்டை வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் காரில் கடத்திச் சென்று தாக்கி கொலை செய்தனா். பின்னா் உடலை சூளகிரி அருகே சின்னாறு பக்கமாக புதைத்ததும் தெரிய வந்தது.
இந்தக் கொலை தொடா்பாக சாகுல் அமீது, அவரது நண்பா்களான பவன் பிரகாஷ் (23), சைபு (22) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். காா் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. கொலை செய்யப்பட்ட அா்ஜூனின் உடல் சூளகிரி வட்டாட்சியா் வளா்மதி, ஒசூா் காவல் ஆய்வாளா் நாகராஜ் ஆகியோா் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது.
அா்ஜூனின் உடலை புதைத்த இடத்தை சாகுல் அமீது, பவன் பிரகாஷ், சைபு ஆகியோா் அடையாளம் காட்டினா். இதைத் தொடா்ந்து உடல் அந்த இடத்திலேயே பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் புதைக்கப்பட்டது.
இந்தக் கொலை வழக்கு தொடா்பாக ஒசூா் ராம் நகரைச் சோ்ந்த தருண் (24) என்பவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். மேலும் ஜேசின் அக்ரம் என்பவரை தேடி வருகின்றனா்.