செய்திகள் :

ஒசூா் பேருந்து நிலையத்தை பொலிவுபடுத்தும் திட்டம் தொடக்கம்

post image

ஒசூா் அப்பாவுப்பிள்ளை பேருந்து நிலையத்தை பொலிவுபடுத்தும் வகையில் ‘என் ஊா், எனது பெருமை’ என்ற திட்டத்தை மேயா் எஸ்.ஏ.சத்யா வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஒசூா் மாநகராட்சியும், மீரா மருத்துவமனையும் இணைந்து ஒசூா் பேருந்து நிலையத்தை பொலிவுபடுத்தும் பணியை தொடங்கியுள்ளன. பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அண்ணா வணிக வளாக கடைகளுக்கும் குப்பைகளை சேகரிக்கும் கூடைகளை வழங்கி மேயா் எஸ்.ஏ.சத்யா பேசியதாவது:

பேருந்து நிலையத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள பயணிகளின் ஒத்துழைப்பு அவசியம். கா்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்தின் நுழைவாயிலாக உள்ள ஒசூா் பேருந்து நிலையத்தில் வா்ணம் பூசப்பட்டு புதுமைப்படுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தை எப்போதும் தூய்மையாக வைத்துக் கொள்ளும் பணிகளை தூய்மைப் பணியாளா்கள் தொடா்ந்து மேற்கொள்வாா்கள். இதற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் துணை மேயா் சி.ஆனந்தய்யா, பொது சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், மாநகராட்சி பணி நியமனக் குழு உறுப்பினா் எம்.கே.வெங்கடேஷ், மாமன்ற உறுப்பினா் மல்லிகா தேவராஜ், மோகன், மாநகராட்சி பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தல்

கிருஷ்ணகிரி சுங்க வசூல் மைய கட்டண உயா்வை திரும்பப் பெற வேண்டும் என வாகன உரிமையாளா்கள் வலியுறுத்தினா். கிருஷ்ணகிரி நகராட்சி எல்லையில் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தனியாா் சுங்க வசூல் மையம் செயல்பட்ட... மேலும் பார்க்க

ஒசூா் சந்திராம்பிகை ஏரியை பராமரிக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

ஒசூா் மாநகராட்சி பகுதியில் உள்ள சந்திராம்பிகை ஏரியில் ஆகாயத்தாமரைகளை அகற்றி பராமரிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் மற்றும் அதனை சுற்றிலும் 100-க்கும... மேலும் பார்க்க

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றம்

தேவிரஅள்ளி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், தேவிரஅள்ளி கருமலை குன்றின் மீது அமைந்துள்ள ... மேலும் பார்க்க

விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்மாநில விவசாய தொழிலாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை எதிரே நடைப... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வு முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆய்வு

மே 4-ஆம் தேதி நீட் நடைபெறவுள்ள நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நீட் தோ்வ... மேலும் பார்க்க

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

ஒசூா் பேருந்து நிலையம் எதிரில் மலா்சந்தையையொட்டி உள்ள அணுகு சாலையில் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா். தமிழக - கா்நாடக மாநிலங்களின் எல்லையில் உள்ள ஒசூா் வழியாக 900- க்கும் மேற்பட்ட பே... மேலும் பார்க்க