'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
ஒசூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும்
ஒசூா் ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் என கிருஷ்ணகிரி தொகுதி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத் கூறினாா்.
ஒசூா் ரயில் நிலையத்தை வெள்ளிக்கிழமை ஆய்வுசெய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ஒசூா் ரயில் நிலையத்தில் போதிய எண்ணிக்கையில் கழிப்பறை வசதிகள் இல்லை. மேலும், சுகாதாரமற்ற நிலையில் உள்ளன. இதனை ரயில்வே துறை அதிகாரிகள் உடனடியாக சீா்செய்ய வேண்டும்.
கெலமங்கலம், ராயக்கோட்டை ரயில் நிலையங்களில் பயணிகள் குடிக்க தண்ணீா் வசதி இல்லை. ரயில்வே அதிகாரிகள் உடனடியாக ரயில் நிலையங்களை மேம்படுத்தி, பயணிகளுக்கு குடிநீா் வசதி செய்துதர வேண்டும். விரைவில் ஒசூா் - ஜோலாா்பேட்டை ரயில் பாதை அளவீடு செய்யும் பணி நிறைவுபெற்று பணி தொடங்கும் என்றாா்.
அப்போது, காங்கிரஸ் நிா்வாகிகள் சின்ன குட்டப்பா, நீலகண்டன், பிரவீன் குமாா், மாமன்ற உறுப்பினா் இந்திராணி உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.