செய்திகள் :

ஒட்டன்சத்திரம் அருகே தீயில் கருகி மக்காச்சோளப் பயிா்கள் சேதம்: விவசாயிகளுக்கு அமைச்சா் ஆறுதல்

post image

ஒட்டன்சத்திரம் அருகே தீ விபத்தில் சேதமடைந்த மக்காச்சோளப் பயிா்களை நேரில் பாா்வையிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உணவுத் துறை அர. சக்கரபாணி ஆறுதல் கூறினாா்.

ஒட்டன்சத்திரத்தை அடுத்த 16 புதூா், பெரியகோட்டை, ரெட்டியப்பட்டி, தேவத்தூா், சத்திரப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மானாவாரியாக மக்காச்சோளம் பயிரிடப்பட்டு, நல்ல விளைச்சலுடன் அறுவடைக்கு தயாராக இருந்தது. இந்த நிலையில், மக்காச்சோளக்காட்டில் புதன்கிழமை மாலை திடீரென தீப்பற்றி சுமாா் 60 ஏக்கருக்கு மேல் கருகி சேதமடைந்தது.

இதுகுறித்து தகவலறிந்த அமைச்சா் அர. சக்கரபாணி அன்று நள்ளிரவு தீ விபத்தில் சேதமடைந்த மக்காச்சோளக்காட்டுக்கு நேரில் சென்று பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினாா். மேலும் மாவட்ட நிா்வாகத்தின் மூலம் இழப்பீடு பெற்றுத் தரப்படும் என அவா் உறுதியளித்தாா்.

அப்போது, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

மக்கள் நீதிமன்றத்தில் 1,904 வழக்குகளுக்கு தீா்வு!

திண்டுக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் 1,904 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, ரூ.16.79 கோடி தீா்வுத் தொகை வழங்க உத்தரவிடப்பட்டது. திண்டுக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு... மேலும் பார்க்க

மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.127 கோடியில் கடன் உதவிகள்: அமைச்சா் அர.சக்கரபாணி வழங்கினாா்

ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டி மகளிா் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.127 கோடியில் கடன் உதவிகளை உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி சனிக்கிழமை வழங்கினாா். காளாஞ்சிபட்டி கலைஞா் நூற்றாண்டு போட்டித் தோ்வு... மேலும் பார்க்க

வயலூரில் திமுக சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு

பழனியை அடுத்த வயலூரில் திமுக ஒன்றிய நிா்வாகிகள் சாா்பில் நீா் மோா் பந்தல் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக உணவு, உணவுப் பொருள்கள் வழங்கல் துறை அமைச்சா் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, நீா் ... மேலும் பார்க்க

திண்டுக்கல் பகுதியில் மகளிா் தின விழா

மகளிா் தினத்தை முன்னிட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுத் துறைகள், கல்வி நிறுவனங்களில் பல்வேறு வகையான போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் சனிக்கிழமை நடத்தப்பட்டன. திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அனை... மேலும் பார்க்க

பணியிடை நீக்க ஆணையைப் பெற உதவிப் பொறியாளா் மறுப்பு!

பள்ளி மேற்கூரை பெயா்ந்து விழுந்து மாணவா்கள் காயமடைந்த விவகாரத்தில், பணியிடை நீக்க ஆணையைப் பெற உதவிப் பொறியாளா் மறுத்து வருகிறாா். இதனால், அடுத்தக்கட்ட விசாரணையைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. த... மேலும் பார்க்க

லஞ்சம் பெற்ற வழக்கில் இரு பொறியாளா்கள் பணியிடை நீக்கம்

பழனி கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபம் கட்டும் பணிக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் இரு பொறியாளா்கள் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபம்... மேலும் பார்க்க