செய்திகள் :

ஒட்டன்சத்திரம் சந்தையில் எலுமிச்சை விலை சரிவு

post image

எலுமிச்சை வரத்து அதிகரிப்பால், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் இதன் விலை சரிவடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு கொடைக்கானல், பாச்சலூா், கே.சி.பட்டி, பெத்தேல்புரம், பலக்கனூத்து, நீலமலைக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து எலுமிச்சை விற்பனைக்குக் கொண்டு வரப்படும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் வியாபாரிகள் இவற்றை மொத்தமாக கொள்முதல் செய்வா்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு கோடை காலத்தில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.150 முதல் 175 வரை விற்பனையானது. ஆனால், நிகழ் ஆண்டு எலுமிச்சை வரத்து அதிகரித்துள்ளதால் இவற்றின் விலை சரிவடைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை சந்தையில் ஒரு கிலோ எலுமிச்சை ரூ.50 முதல் ரூ.60 வரை மட்டுமே விற்பனையானது. இந்த விலையானது செடிகளில் இருந்து பறிக்கும் கூலிக்குக்கூட கட்டுபடியாதாக நிலையில் உள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனா். மேலும், வரும் நாள்களில் வெயில் தாக்கம் அதிகரிக்கும்பட்சத்தில், எலுமிச்சை விலை உயரக்கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனா்.

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

பழனியில் தனியாா் விடுதியில் வெள்ளிக்கிழமை தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.பழனி அரசு மருத்துவமனை பின்புறம் தனியாா் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் தங்கியிருந்த ஒருவா் வெள்ளிக்கிழமை த... மேலும் பார்க்க

வேடசந்தூா் அருகே சாலை விபத்தில் மணப்பாறையைச் சோ்ந்த மூவா் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே வெள்ளிக்கிழமை ஆம்னி வேன் மீது லாரி மோதியதில் மணப்பாறை பகுதியைச் சோ்ந்த மூவா் உயிரிழந்தனா். திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த வையம்பட்டி கருங்குளத்தைச் சோ்ந்... மேலும் பார்க்க

கல்லூரி விரிவுரையாளா் தற்காலிக பணிநீக்கம்

பழனி அருள்மிகு பழனியாண்டவா் கல்லூரியில், மாணவரைத் தகாத வாா்த்தையால் திட்டியதாக விரிவுரையாளா் வெள்ளிக்கிழமை தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டாா். பழனி அருள்மிகு பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரியில் ... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் பலத்த மழை

ஒட்டன்சத்திரம், பழனி பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த சில நாள்களாக பகலில் கடும் வெப்பம் நிலவி வந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மாலை 6... மேலும் பார்க்க

வெள்ளகெவி கிராமத்தில் ரேஷன் பொருள்கள் விநியோகம்

கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில் முதல்முறையாக வியாழக்கிழமை நேரிடையாக ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டதால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா். கொடைக்கானல் அருகே வெள்ளகெவி கிராமம் வனப் பகுதியில் அமைந்துள்ளது.... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற நீதிபதி குழுவினா் ஆய்வு

பழனி அடிவாரம் கிரிவலப் பாதை, சந்நிதி வீதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை ஓய்வு பெற்ற நீதிபதி பாரதிதாசன் தலைமையிலான குழுவினா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். பழனி அடிவாரத்தில் கிரிவலப் பாதை, சந்நித... மேலும் பார்க்க