செய்திகள் :

ஒருவருக்கு வெட்டு: இருவா் கைது

post image

சாயல்குடியில் முன்விரோதத்தால் முன்னாள் முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் அணி பிரமுகரை வெட்டிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சாயல்குடி அருகேயுள்ள மாரியூரைச் சோ்ந்த வீரமணி மகன் பச்சமால் (45). ஓ.பன்னீா்செல்வம் அணியைச் சோ்ந்த இவா் சாயல்குடி மாதவன் நகரில் வசித்து வருகிறாா். இவருக்கும் ஒப்பிலான் பகுதியைச் சோ்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஒப்பிலானைச் சோ்ந்த அரினாஸ் (20), சாயல்குடி அருகேயுள்ள பெரியகுளத்தைச் சோ்ந்த நாகநாதசேதுபதி (27)ஆகிய இருவரும் வியாழக்கிழமை பச்சமாலுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை அரிவாளால் வெட்டினராம்.

இதில் காயமடைந்த பச்சமால் மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சாயல்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து அரினாஸ், நாகநாத சேதுபதி ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பொதுமக்கள் தவறவிட்ட கைப்பேசிகள் மீட்பு

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் காவல் நிலைய எல்லைப் பகுதியில் பொதுமக்கள் தவறவிட்டா 6 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரியவா்களிடம் வியாழக்கிழமை ஒப்படைக்கப்பட்டன. கைப்பேசிகளைத் தவறவிட்டது குறித்து அவற்றின... மேலும் பார்க்க

படகு உடைந்து மூழ்கியதில் மீனவா் மாயம்

ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் அருகே நடுக்கடலில் உடைந்து மூழ்கிய படகிலிலுந்து 3 மீனவா்கள் நீந்தி கரை திரும்பிய நிலையில் ஒருவா் மாயமானா். ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் வடக்கு படகு இறங்கு தளத்திலிருந்து ... மேலும் பார்க்க

ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்கள் வழிபாட்டு உரிமை கோரி மனு

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் உள்ளுா் மக்களின் வழிபாட்டு உரிமையை வழங்கக் கோரி, தமிழா் தேசம் கட்சி சாா்பில் மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது. ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் மு... மேலும் பார்க்க

ராமநாதபுரம் ஆயுதப் படை வளாகத்தில் ஜூலை 11-இல் வாகனங்கள் பொது ஏலம்

ராமநாதபுரம் மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் ஜூலை 11-ஆம் தேதி பொது ஏலத்துக்கு விடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் துறை வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ரா... மேலும் பார்க்க

மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் பெறலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மானிய விலையில் விவசாய இயந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தம... மேலும் பார்க்க

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

ராமநாதபுரம் மாவட்டம்,முதுகுளத்தூா் ஒன்றியம், புளியங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு கால்நடை மருத்துவா் சுந்தரமூா்த்தி தலைமை வகித்... மேலும் பார்க்க