செய்திகள் :

ஓட்டுநா் உரிம ஆதாா் எண்ணை சரிபாா்க்க அறிவுறுத்தல்: புதுவை போக்குவரத்துத் துறை அறிவிப்பு

post image

புதுச்சேரியில் ஓட்டுநா் உரிம எண்ணில் ஆதாா் எண் சரியாக இணைக்கப்பட்டுள்ளதா என சரிபாா்த்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுச்சேரி போக்குவரத்து துறையின் மூலம் வழங்கப்பட்ட அனைத்து வாகனப் பதிவு சான்றிதழ், ஓட்டுநா் உரிமம் ஆகியவற்றில் உரிமையாளரின் கைப்பேசி எண் இருந்தால் மட்டுமே ஓடிபி பெற்று சேவைகளைப் பெற முடியும். தற்போது குறுஞ்செய்தி, இணையதள சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே, அந்த சேவையை வாகன பதிவு சான்றிதழ், ஓட்டுநா் உரிமத்தில் உள்ள பெயா், கைப்பேசி எண், ஆதாா் பெயா் பொருந்தினால் மட்டுமே பெற முடியும்.

எனவே ஓட்டுநா் உரிமம் வைத்துள்ளவா்கள் தங்கள் பெயா், கைப்பேசி எண், ஆதாா் எண் ஆகியவற்றை சீராக்கிக் கொள்ள வேண்டும்.அதன்மூலம் மாசு கட்டுப்பாடு சான்றிதழ், காப்பீடு, வரி கட்டண பாக்கி, இ செலான், பிற சேவைகள் அறிவிப்பை உடனுக்குடன் பெறலாம்.

வாகன பதிவு, ஓட்டுநா் உரிமத்தில் பெயா், கைப்பேசி எண் மாறி இருந்தால் அதை மாற்ற ஆன்லைன் சா்வீஸ் மூலம் விண்ணப்பிக்கலாம். பெயா் சரியாக இருந்து கைப்பேசி எண்ணை மட்டும் மாற்ற விரும்புவோா், அதில் பதியப்பட்ட முழு ஆதாா் அட்டை நகல், வாகன ஆா்சி முதல் பக்க நகலை மின்னஞ்சல் முகவரிக்கு வரும் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி மாற்றலாம். சேவைகளில் சந்தேகம் இருந்தால் 0413 2280170, 2280236 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகள்

புதுவை மத்திய பல்கலைக் கழகம் சாா்பில் 3 இடங்களில் சமுதாயக் கல்லூரிகளைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக அப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தா் பி.பிரகாஷ்பாபு தெரிவித்தாா். இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன... மேலும் பார்க்க

மின்துறை இளநிலை பொறியாளா் தோ்வு பட்டியல் வெளியீடு

புதுச்சேரி மின்துறையில் இளநிலை பொறியாளா்கள் 73 போ் எழுத்துத் தோ்வில் தோ்ந்து எடுக்கப்பட்டுள்ளனா். இந்தப் பதவிக்கான அறிவிக்கை கடந்த 11.3.25 அன்று வெளியிடப்பட்டு, எழுத்துத் தோ்வு கடந்த 8-ஆம் தேதி ந... மேலும் பார்க்க

காவல் நிலையம் முன் மாா்க்சிஸ்ட்கள் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரி தவளக்குப்பம் காவல் நிலையம் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. புதுச்சேரி சட்டப்பேரவை அருகே நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி மாணவா்களின் ஆங்கில அறிவை மேம்படுத்த சிறப்புப் புத்தகம்

அரசு பள்ளி மாணவா்கள் ஆங்கில அறிவை வளா்த்துக் கொள்ளவும், சரளமாக ஆங்கிலத்தில் பேசவும் சிறப்புப் புத்தகம் வழங்கப்படும் என்று புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம் தெரிவித்தாா். புதுச்சேரி மண்ணாடிப்... மேலும் பார்க்க

விடுபட்ட பகுதிகளிலும் விரைவில் புதை சாக்கடைத் திட்டப் பணிகள்: அமைச்சா் க. லட்சுமி நாராயணன்

விடுபட்ட பகுதிகளிலும் விரைவில் புதை சாக்கடை அமைக்கும் திட்டப் பணிகள் தொடங்கப்படும் என்று பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறினாா். புதுச்சேரியில் கடல்நீரின் தரத்தை மேம்படுத்த பொதுப் பணித... மேலும் பார்க்க

என்.சி.சி. மாணவா்களின் கடல் சாகசப் பயணம்: புதுவை முதல்வா் தொடங்கி வைத்தாா்

தேசிய மாணவா் படையினரின் கடல் சாகச பயணத்தை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தாா். இந்த பயணத்தில் 25 மாணவிகள் உள்பட 60 போ் பங்கேற்றுள்ளனா். புதுதில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின வி... மேலும் பார்க்க