பிரதமா் தலைமையில் பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்க ஆண்டு கூட்டம்
ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டம்
புதுச்சேரி: புதுச்சேரி ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்கள் நலச்சங்கம் சாா்பில் காத்திருப்புப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி நடேசன் நகரில் உள்ள மகளிா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு, ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தாா்.
ஓய்வுபெற்ற அங்கன்வாடி பணியாளா்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய பணிக்கொடை, 6-ஆவது ஊதியக் குழு பரிந்துரைபடி அங்கன்வாடி உதவியாளா்களுக்கு வழங்க வேண்டிய 50 சதவீத நிலுவைத் தொகை, ஓராண்டுக்கும் மேலாக வழங்கப்படாமல் உள்ள முதியோா் ஓய்வூதியத் தொகை உள்ளிட்டவற்றை வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.
சங்கத் தலைவா் மண்ணாங்கட்டி, நூா்பீவி, ருக்மணி, தேவிகா, அரசு ஊழியா்கள் சம்மேளனத்தைச் சோ்ந்த பிரேமதாசன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.