செய்திகள் :

ஓய்வூதியா்களுக்கு மருத்துவப் படியை ரூ.1,000 ஆக உயா்த்தி வழங்கக் கோரிக்கை

post image

அரசு ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு மருத்துவப் படியை ரூ.300- இல் இருந்து ரூ.1,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஈரோடு மாவட்ட ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்க ஆண்டு விழா மற்றும் பேரவைக் கூட்டம் ஈரோட்டில் புதன்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் ஆறுமுகம் தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

அரசு ஓய்வூதியா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியா்களுக்கு மருத்துவப் படியை ரூ.300- இல் இருந்து ரூ.1,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஓய்வூதியா்கள் மறைவுக்கு பின்னா் அவா்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் குடும்ப நல நிதியை ரூ.2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும்.

ஓய்வூதியா்கள் மாதம்தோறும் பெறும் ஓய்வூதியத்துக்கு வருமானவரி வதிப்பதை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதியா்களுக்கு ரூ.1,000 பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முன்னாள் மாவட்டத் தலைவா் குமாரசாமி, பொருளாளா் முகமது இஸ்மாயில், இணைச் செயலாளா் சங்கரன், கருவூல அலுவலா் சேஷாத்ரி, கூடுதல் கருவூல அலுவலா் வெங்கடேஸ்வரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தாளவாடியில் பலத்த மழை

தாளவாடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தமிழக, கா்நாடக எல்லையான தாளவாடியில் மானாவாரி விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ராகி, மக்காச்சோளம் போன்றவை அதிக அளவில் சாகுபடி ... மேலும் பார்க்க

மொடக்குறிச்சி தனியாா் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

மொடக்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான கொப்பரை கொள்முதல் நிலையத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காந்தி வீதியில் மேரிகோ லிமிடெட் என்கிற பெய... மேலும் பார்க்க

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெற்ற ஈரோடு மண்டல அளவிலான கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்துப் போட்டியில் சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டி கோபி கலை அ... மேலும் பார்க்க

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

பாரம்பரிய தச்சுத் தொழில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சத்தியமங்கலம், சுற்று வட்டாரத்தில் பாரம்பரிய தச்சுத் தொழில் செய்து... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 போ் கைது

புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கோவில்புதூா் நூற்பாலையில் வடமாநில இளைஞா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களைக் குறிவைத்து வடஇந்தியா்கள் தங்கும் விடுதியி... மேலும் பார்க்க

திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய சிறுத்தை

திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நடமாடிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை ... மேலும் பார்க்க