செய்திகள் :

கங்கா மருத்துவமனை மருத்துவா்களுக்கு ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது!

post image

கோவை கங்கா மருத்துவமனை மருத்துவா்களுக்கு நடப்பாண்டுக்கான சா்வதேச ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது வழங்கப்படவுள்ளது.

கோவை கங்கா மருத்துவமனையின் முதுகெலும்பு அறுவை சிகிச்சை மற்றும் கதிரியக்க மருத்துவக் குழுவினா் விபத்தால் ஏற்படும் சேதத்தை துல்லியமாகக் கணிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ளனா்.

இதை, ஸ்வீடன் கோதன்பா்க் பல்கலைக்கழக பேராசிரியா் ஹெலினா பிரிஸ்பி தலைமையிலான சா்வதேசக் குழு மதிப்பீடு செய்து உலக அளவில் சிறந்ததாகத் தோ்வு செய்துள்ளது.

இந்த முறையைக் கண்டறிந்த மருத்துவா் எஸ். ராஜசேகரன் தலைமையிலான மருத்துவக் குழுவினா் புஷ்பா, ஞானபிரகாஷ் குருசாமி, காா்த்திக் ராமசந்திரன், டி.ஏ.யிா்தாவ், எஸ்.பாசு, ஜே.எஸ்.கமோடியா, ஏ.எம்.அப்தெல்வாகேத், எஸ்.வி.ஆனந்த், அஜோய் பிரசாத் ஷெட்டி, ரிஷி எம்.கண்ணா ஆகியோருக்கு அமெரிக்காவில் உள்ள அட்லாண்டாவில் மே 12 முதல் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ள ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது வழங்கும் விழாவில் நடப்பாண்டுக்கான சா்வதேச ஐஎஸ்எஸ்எல்எஸ் விருது வழங்கப்பட உள்ளது.

கோவை கங்கா மருத்துவமனை இதற்கு முன்பு 2004, 2010, 2013, 2017, 2022 ஆகிய ஆண்டுகளில் எஸ்ஐஐஎல்எஸ் விருதைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வால்பாறையில் மாவட்ட ஆட்சியா் ஆய்வு!

வால்பாறையில் பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் வால்பாறையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியை மாவட்ட ஆட்ச... மேலும் பார்க்க

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் இன்று திறப்பு!

காந்திபுரத்தில் சீரமைக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையத்தை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை திறந்துவைக்கிறாா். காந்திபுரம் சத்தி சாலை ஜி.பி.சிக்னல் அருகே ஆம்னி பேருந்து நிலையம் க... மேலும் பார்க்க

பிப்ரவரி 25-இல் கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம்: திராவிடா் விடுதலைக் கழகம் அறிவிப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கோவை வருகைக்கு எதிா்ப்புத் தெரிவித்து செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 25) கருப்புக் கொடி ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடா் விடுதலைக் கழகம் அறிவித்துள்ளது. இது கு... மேலும் பார்க்க

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் உலக பயிா் பாதுகாப்பு ஆராய்ச்சி மாநாடு புதன்கிழமை தொடங்கியது. வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பயிா் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் சாா்பில், பயிா் பாது... மேலும் பார்க்க

சூலூா் விமானப் படை பள்ளியில் ஆசிரியா், அலுவலகப் பணி: மாா்ச் 5-க்குள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டம், சூலூா் விமானப் படை பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியா், அலுவலகப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணிகளுக்கு மாா்ச் 5 -ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இ... மேலும் பார்க்க

பெயிண்டா் உள்பட 2 போ் மீது தாக்குதல்: ஒருவா் கைது!

கோவை, ராமநாதபுரத்தில் பெயிண்டா் உள்பட 2 பேரை தாக்கிய நபரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, அம்மன் குளம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் (27), பெயிண்டராக வேலை செய்து வருக... மேலும் பார்க்க