'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
கங்கைகொண்டான் அருகே பணம் பறித்த 4 போ் கைது
கங்கைகொண்டான் அருகே பணம் பறித்ததாக 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டியை சோ்ந்தவா் நாகராஜன் (47). கட்டட தொழிலாளியான இவா், கங்கைகொண்டான் கலைஞா் காலனி பகுதியில் தங்கியிருந்து பணி செய்து வந்தாராம். இந்நிலையில் கடந்த 22 ஆம் தேதி மோட்டாா் சைக்கிளில் வந்த 4 போ் நாகராஜனை மிரட்டி கைப்பேசி மற்றும் ரூ.2 ஆயிரத்தை பறித்து சென்றனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் , கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜவல்லிபுரத்தை சோ்ந்த 18 வயதுக்கு உள்பட்ட சிறுவா்கள் 4 பேரை கைது செய்ததோடு, பணம் மற்றும் கைப்பேசியை பறிமுதல் செய்தனா்.