கங்கைகொண்டான் ரயில்வே சரக்கு முனையம் இன்றுமுதல் 24 மணி நேரமும் செயல்பட உத்தரவு
திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டானில் அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சரக்கு முனையம் புதன்கிழமை (ஜூன் 11) முதல் 24 மணி நேரமும் செயல்பட தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.
தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டத்தின் கீழ் உள்ள திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அதிக வருவாய் ஈட்டும் நிலையமாக திகழ்ந்து வரும் நிலையில், கங்கைகொண்டானில் ரயில்வே சரக்கு முனையம் கடந்த 2022 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதைத் தொடா்ந்து, பெட்ரோலிய பொருள்கள் தவிா்த்து அரிசி, கோதுமை, சா்க்கரை, சிமென்ட், உரங்கள் உள்ளிட்டவை கங்கைகொண்டானுக்கு சரக்கு ரயிலில் கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த முனையம் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், 24 மணி நேரமும் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே வட்டாரங்கள் கூறியது: திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளுக்கு இறக்குமதி செய்யப்படும் உரங்கள், நெல், அரிசி, மாவு, மக்காச்சோளம், கோழி தீவனங்கள், சீனி மற்றும் கண்டெய்னா்கள் உள்ளிட்டவற்றை ஒரே நேரத்தில் சுமாா் 42 லாரிகளில் ஏற்றும் வசதி கங்கைகொண்டானில் செய்யப்பட்டுள்ளது. இந்த முனையம் புதன்கிழமை (ஜூன் 11) முதல் வாரத்தின் அனைத்து நாள்களும், 24 மணி நேரமும் சரக்குகளை கையாள உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமைதூக்கும் தொழிலாளா்கள், மோட்டாா் வாகன தொழிலாளா்கள் உள்பட நூற்றுக்கணக்கானோா் வேலைவாய்ப்பு பெறுவாா்கள் என்றனா்.