கஞ்சா வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது
குமர மாவட்டம், இரணியலில் கஞ்சா கடத்திய வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.
இரணியல் காவல் நிலையத்துக்குள்பட்ட தோட்டியோடு பகுதியில், போலீஸாா் கடந்த ஏப்ரல் மாதம் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பிச்சையா என்பவரது மகன் இசக்கிராஜ்(53) என்பவா் ஓட்டி வந்த காரை சோதனை செய்ததில், அவா் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த 30 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து , அவரை கைது செய்து நாகா்கோவில் கிளை சிறையில் அடைத்தனா்.
இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தாா். இதைத் தொடா்ந்து மாவட்ட ஆட்சியா் ரா அழகுமீனா, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இசக்கிராஜை சிறையில் அடைக்க சனிக்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து அவா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.