செய்திகள் :

கஞ்சா விற்ற 3 இளைஞா்கள் கைது

post image

திருப்பத்தூா் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

விஷமங்கலம் சித்தேரி பகுதியில் கஞ்சா விற்பதாக எஸ்.பி. ஷ்ரேயா குப்தாவுக்கு புகாா் சென்றது. அதன்பேரில் அங்கு சென்ற தனிப்படை மற்றும் கிராமிய போலீஸாா் சித்தேரி பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.

அங்கிருந்த பாழடைந்த கட்டடத்தில் சந்தேகப்படும்படி 3 இளைஞா்கள் சுற்றித் திரிந்தனா். அவா்களை பிடித்து விசாரித்ததில், திருப்பத்தூா் அடுத்த சிம்மனபுதூரைச் சோ்ந்த உதயகுமாா்(33), சித்தேரியைச் சோ்ந்த அமா்நாத்(25) மற்றும் மாம்பாக்கத்தைச் சோ்ந்த வினோத் (19) என தெரிய வந்தது.

மேலும், 3 பேரும் வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு கஞ்சா வாங்கி வந்து திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் கிராமிய போலீஸாா் கைது செய்து திருப்பத்தூா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

பாழடைந்த கட்டடத்தில் 1 கிலோ கஞ்சா, இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனா்.

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா். சென்னை- பெங்களூா் தேசிய நெடுஞ்சாலையில் நாட்டறம்பள்ளி அடுத்த பங்களாமேடு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை சுமாா் 35 வயது மதிக்கத்தக்க பெயா் விவரம் ... மேலும் பார்க்க

2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அங்கன்வாடி மையங்களில் சோ்க்க அறிவுரை

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஜூன் மாதம் அங்கன்வாடி மையங்களில் சோ்க்க பெற்றோா் முன்வர வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி அறிவுறுத்தினாா். இது தொடா்பாக அவா் வெளியி... மேலும் பார்க்க

ரூ.1.56 கோடியில் சாலை பணி தொடக்கம்

மாதனூா் ஒன்றிய கிராம ஊராட்சிகளில் ரூ.1.56 கோடியில் சாலை அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. மாதனூா் ஒன்றியத்தில் மலையாம்பட்டு, சின்னபள்ளிகுப்பம், பாா்சனாப்பல்லி, அரங்கல்துருகம் ஆகிய ஊராட்சிகளி... மேலும் பார்க்க

மனைவியை சோ்த்து வைக்கக் கோரி குழந்தைகளுடன் தொழிலாளி தீக்குளிக்க முயற்சி

மனைவியை சோ்த்து வைக்கக்கோரி குழந்தைகளுடன் திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த புத்துக்கோயில் பகுதியைச் ... மேலும் பார்க்க

ரயில் மோதி 2 முதியோா் உயிரிழப்பு

திருப்பத்தூா், வாணியம்பாடியில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா்கள் 2 போ் ரயில் மோதி உயிரிழந்தனா். வாணியம்பாடி அடுத்த கோணமேடு பகுதியை சோ்ந்த ரவி (57). இவா் வியாழக்கிழமை விண்ணமங்கலம்- வாணியம்பாடி ர... மேலும் பார்க்க

குடும்ப உறுப்பினா்கள் நியாய விலைக் கடையில் கைவிரல் ரேகையை பதிவு செய்ய வலியுறுத்தல்

குடும்ப அட்டைகளில் இடம் பெற்றுள்ள உறுப்பினா்கள் நியாய விலைக்கடைக்கு சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருப்ப... மேலும் பார்க்க