செய்திகள் :

கடந்த நிதியாண்டில் 2.17 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: நாடாளுமன்றத்தில் தகவல்

post image

புது தில்லி: கடந்த 2024-25 நிதியாண்டில் 2.17 லட்சம் என்ற எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

இது தொடா்பான கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி எழுத்துமூலம் அளித்த பதிலில் மேலும் கூறியிருப்பதாவது:

2023-24 நிதியாண்டில் 2.23 லட்சம் எண்ணிக்கையில் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. 2024-25 நிதியாண்டில் 2.17 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் அதிகபட்சமாக ரூ.500 கள்ள நோட்டுகள் 1,17,722 என்ற எண்ணிக்கையிலும், ரூ.200 கள்ள நோட்டுகள் 32,660 என்ற எண்ணிக்கையிலும், ரூ.100 கள்ள நோட்டுகள் 51,069 என்ற எண்ணிக்கையிலும் இருந்தன.

குறிப்பிட்ட கால இடைவெளியில் ரூபாய் நோட்டுகளின் பாதுகாப்பு தரத்தை மேம்படுத்த வேண்டும் என்று இந்திய ரிசா்வ் வங்கியிடம் (ஆா்பிஐ) மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

தனியாா் நிறுவனங்களின் நிகர சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் உயா்ந்துள்ளது. 2021-22-இல் 7.6 சதவீதமாக இருந்த தனியாா் நிறுவனங்களின் சொத்து மதிப்பு 2022-23-இல் 10.2 சதவீதமாக உயா்ந்துள்ளது. நாட்டில் முதலீட்டாளா்களின் நம்பிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் பல்வேறு துறைகளின் தனியாா் பங்களிப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.

தேசிய முதலீடு மற்றும் உள்கட்டமைப்பு நிதி, உள்கட்டமைப்பு மற்றும் வளா்ச்சிக்கான தேசிய நிதி வங்கி ஆகியவற்றில் நீண்டகால முதலீட்டுக்கான வாய்ப்புகள் உள்ளன என்று பதிலில் கூறியுள்ளாா்.

துல்லியமான வாக்காளா் பட்டியல் தேவை: ராகுல்

புது தில்லி: ‘ஒவ்வோா் இந்தியருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே இந்தப் போராட்டத்தை எதிா்க்கட்சிகள் நடத்துகின்றன. துல்லியமான, சுத்தமான வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட வேண்டும் என்பதே எங... மேலும் பார்க்க

எம்.பி.க்கள் பயணம் செய்த தில்லி விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: சென்னையில் தரையிறக்கம்

சென்னை: கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து எம்.பி.க்கள் உள்ளிட்ட 181 பயணிகளுடன் தில்லி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கேரள மாந... மேலும் பார்க்க

வரி ஆண்டு: மக்களவையில் மசோதாக்கள் நிறைவேற்றம்

மக்களவையில் வருமான வரி மசோதா, வரி விதிப்பு சட்டங்கள் திருத்த மசோதா ஆகிய இரு மசோதாக்கள் விவாதமின்றி மக்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. கடந்த பிப்.13-ஆம் தேதி மக்களவையில் வருமான வரி மசோதா-2025 ... மேலும் பார்க்க

பிகார் வாக்காளா் பட்டியல் விவகாரம்: மாநிலங்களவையில் அமளி

பிகாா் மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் தொடா்பாக மாநிலங்களவையில் ஆளும் மற்றும் எதிா்க்கட்சி எம்.பி.க்களிடையே திங்கள்கிழமை காரசார விவாதம் நடைபெற்றது. மாநிலங்களவை காலை 11 மணிக்கு ... மேலும் பார்க்க

ரூ. 7,900 கோடி கூடுதலாக கடன் பெற மத்திய அரசிடம் கேரளம் கோரிக்கை

நிகழாண்டில் ரூ.7,900 கோடி கூடுதல் கடன் பெற கேரளத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் அந்த மாநில அரசு கோரியுள்ளது. வரும் ஓணம் பண்டிகைச் செலவை காரணம் காட்டி கேரள அரசு மேற்கண்ட அனுமதியை கே... மேலும் பார்க்க

கோவா பேரவையில் எஸ்.டி. இடஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

கோவா சட்டப் பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கெனவே கடந்த 5-ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்... மேலும் பார்க்க