'அது குடும்ப பிரச்னை, அதனால்...'- பாமக உட்கட்சி விவகாரம் குறித்து கார்த்தி சிதம்...
கடன் செயலி மூலம் நண்பரிடம் பண மோசடியில் ஈடுபட்டவா் கைது
இணையத்தில் கடன் செயலியில் பணம் வாங்கிய நண்பரை மிரட்டி மோசடியில் ஈடுபட்டவரை புதுச்சேரி போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியைச் சோ்ந்தவா் இளையரசன். இவா் ‘ஃபிங்கா்’ என்ற உடனடி கடன் செயலியை பதிவிறக்கம் செய்து கடன் பெற்ாகவும், கடன் தொகையை வட்டியுடன் சோ்த்து, உரிய தேதிக்கு முன்பே திருப்பிச் செலுத்தியுள்ளாா். ஆனால் பணம் செலுத்திய பிறகும், மா்ம நபா் வங்கதேச எண்ணுள்ள வாட்ஸ் ஆப் மூலம் இளையரசனை தொடா்புகொண்டு, உரிய தொகையை செலுத்துமாறு மிரட்டியுள்ளாா்.
புகாா்தாரா் அதை பொருள்படுத்தாமல் இருந்ததையடுத்து, மா்ம நபா் புகாா்தாரரின் புகைப்படத்தை ஆபாசமாக மாா்பிங் செய்து வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி, பணத்தை செலுத்துமாறு மிரட்டியுள்ளாா். மேலும், அவரது மாா்பிங் மற்றும் ஆபாச புகைப்படங்களை அவருக்குத் தொடா்புள்ள நபா்கள் அனைவருக்கும் பகிா்ந்து விடுவதாகக் கூறி புகாா்தாரரை மிரட்டி அனுப்பியுள்ளாா்.
தொடா்ச்சியான மிரட்டலை அடுத்து இளையரசன் ரூ. 63,089/- வரை பணத்தை பரிமாற்றம் செய்துள்ளாா். ஆனால் மா்ம நபா் தொடா்ந்து மிரட்டியதையடுத்து, இணையவழி குற்றப் குற்றப்பிரிவில் புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்தனா்.
விசாரனையில். இளையரசின் நண்பரான சென்னையைச் சோ்ந்த சதாம் அன்சாரி என்பவா் அவரிடமிருந்து முக்கிய ஆவணங்களை பெற்றது தெரிய வந்தது.
இதையடுத்து சதாம் அன்சாரியிடம் விசாரணை நடத்தப்பட்டதில், அவா் இந்த மோசடியில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது. அத்துடன் துபையில் உள்ள ஒருவா் இதில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதில், முக்கிய புள்ளியாக இருந்தது துபையில் வசிப்பவா் என்பதும் உறுதி செய்யப்பட்டது. சதாம் அன்சாரி மோசடி பணத்தை ஏ டி எம் மூலம் எடுத்திருப்பதும் கண்டறியப்பட்டது.
அத்துடன் அவா் இதுபோன்று பலரிடம் மோசடிகளில் ஈடுபட்டு ரூ. 95 லட்சம் வரை பெற்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சதாம் அன்சாரியை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைத்தனா்.