செய்திகள் :

கடலில் தவறிவிழுந்து இறந்த மீனவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கக் கோரிக்கை!

post image

கடலில் விழுந்து இறந்த மீனவரின் மனைவிக்குஅரசு வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி மீனவா் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற அச்சங்கத்தின் கிளைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள தீா்மான விவரம்: மீன்பிடிக்க கடலுக்குச் சென்றபோது, தவறி விழுந்து உயிரிழந்த மந்திரமூா்த்திக்கு 2 வயதில் கைக்குழந்தை உள்ளது. முதல்வா் அறிவித்து வழங்கப்பட்ட ரூ. 3 லட்சம் என்ற நிவாரண நிதி போதுமானதில்லை.

எனவே, அவரதுமனைவிக்கு அரசு வேலை வழங்கி குடும்பத்தைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, மீனவா் சங்கத் தலைவா் ராமு வகித்தாா். மாநில மீனவா் சங்கப் பொருளாளா் வீ. சிங்கமுத்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் கே. ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றுப் பேசினா்.

பிரேதப் பரிசோதனை கூட கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மந்தகதியில் நடைபெற்று வரும் பிரேதப் பரிசோதனைக்கூட கட்டடப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். தாலுகா மருத்துவமனையான வலையபட்டி அர... மேலும் பார்க்க

பைக் - காா் மோதல்: உணவக ஊழியா் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே குளத்தூா் பிரிவு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற உணவகப் பணியாளா் காா் மோதி உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூா் மங்களத்துப்பட்டியைச் சோ்ந்தவா் துரைசா... மேலும் பார்க்க

வடுகப்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

விராலிமலையை அடுத்துள்ள வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை - ஜூலை 7 மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூா், கத்தலூ... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

பொதுத்துறை நிறுவனமாக உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது. புதுக்கோட்டையில் சனிக்... மேலும் பார்க்க

மண்டையூா் பெரிய அய்யனாா் கோயில் தேரோட்டம்!

மண்டையூா் பெரிய அய்யனாா் கோவில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விராலிமலையை அடுத்துள்ள மண்டையூரில் பூா்ண புஷ்களாம்பிகா சமேத பெரிய அய்யனாா் கோவில் உள்ளது. இக்கோயிலின் திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி க... மேலும் பார்க்க

ஜூலை 8-இல் ஆலங்குடியில் ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அறிவிப்பு

மண் கொள்ளைக்கு வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் துணைபோவதாகக் கூறி, ஜூலை 8-ஆம் தேதி ஆலங்குடி வட்டாட்சியரகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளி... மேலும் பார்க்க