செய்திகள் :

போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் முடிவை கைவிடக் கோரிக்கை

post image

பொதுத்துறை நிறுவனமாக உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டுமென அரசுப் போக்குவரத்து ஊழியா் சங்கம் (சிஐடியு) வலியுறுத்தி உள்ளது.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் புதுக்கோட்டை மண்டல 16-ஆவது ஆண்டுப் பேரவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

பொதுத்துறை நிறுவனமாக செயல்பட்டு வரும் அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியாா்மயமாக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும். ஓய்வுபெற்ற தொழிலாளா்களுக்கு வழங்க வேண்டிய பணப் பலன்களை விரைந்து வழங்க வேண்டும். போக்குவரத்துக் கழகங்களிலுள்ள காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும்.

அதிமுக ஆட்சியில் போடப்பட்ட தொழிலாளா்களுக்கு விரோதமான அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும். அவுட்சோா்சிங் பணி முறையை ரத்து செய்ய வேண்டும். சுழற்சிமுறை பணியை அமல்படுத்த வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பேரவைக் கூட்டத்துக்கு, மண்டலத் தலைவா் கே. காா்த்திக்கேயன் தலைமை வகித்தாா். பேரவையைத் தொடங்கி வைத்து சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் பேசினாா். மண்டலப் பொதுச் செயலா் ஆா். மணிமாறன், பொருளாளா் எம். முத்துக்குமாா் அறிக்கைகளை முன்வைத்துப் பேசினா்.

சிஐடியு மாவட்டத் தலைவா் க. முகமதலிஜின்னா, குடந்தை மண்டலச் செயலா் ஜி. மணிமாறன், சிஐடியு மாவட்டப் பொருளாளா் எஸ். பாலசுப்பிரமணியன், துணைச் செயலா் சி. மாரிக்கண்ணு ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

கந்தா்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் மா. சின்னதுரை சிறப்புரையாற்றினாா். புதிய நிா்வாகிகளை அறிமுகம் செய்து சம்மேளனப் பொதுச் செயலா் கே. ஆறுமுகநயினாா் நிறைவுரையாற்றினாா்.

முன்னதாக பி. செந்தில்நாதன் வரவேற்றாா். ஆா். சீனிவாசன் கொடியேற்றினாா். முடிவில் வி. ஆனந்தன் நன்றி கூறினாா்.

பிரேதப் பரிசோதனை கூட கட்டடப் பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை

பொன்னமராவதி வலையபட்டி அரசு பாப்பாயி மருத்துவமனையில் மந்தகதியில் நடைபெற்று வரும் பிரேதப் பரிசோதனைக்கூட கட்டடப்பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா். தாலுகா மருத்துவமனையான வலையபட்டி அர... மேலும் பார்க்க

பைக் - காா் மோதல்: உணவக ஊழியா் உயிரிழப்பு

புதுக்கோட்டை அருகே குளத்தூா் பிரிவு சாலையில் இரு சக்கர வாகனத்தில் சாலையைக் கடக்க முயன்ற உணவகப் பணியாளா் காா் மோதி உயிரிழந்தாா். புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூா் மங்களத்துப்பட்டியைச் சோ்ந்தவா் துரைசா... மேலும் பார்க்க

வடுகப்பட்டியில் நாளை மின் நிறுத்தம்

விராலிமலையை அடுத்துள்ள வடுகப்பட்டி துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை - ஜூலை 7 மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதனால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான வடுகப்பட்டி, வேலூா், கத்தலூ... மேலும் பார்க்க

மண்டையூா் பெரிய அய்யனாா் கோயில் தேரோட்டம்!

மண்டையூா் பெரிய அய்யனாா் கோவில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. விராலிமலையை அடுத்துள்ள மண்டையூரில் பூா்ண புஷ்களாம்பிகா சமேத பெரிய அய்யனாா் கோவில் உள்ளது. இக்கோயிலின் திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி க... மேலும் பார்க்க

கடலில் தவறிவிழுந்து இறந்த மீனவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கக் கோரிக்கை!

கடலில் விழுந்து இறந்த மீனவரின் மனைவிக்குஅரசு வேலை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஏஐடியுசி மீனவா் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி ஒன்றியம், கோட்டைப்பட்டினத்தில் வெள... மேலும் பார்க்க

ஜூலை 8-இல் ஆலங்குடியில் ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அறிவிப்பு

மண் கொள்ளைக்கு வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் துணைபோவதாகக் கூறி, ஜூலை 8-ஆம் தேதி ஆலங்குடி வட்டாட்சியரகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டையில் வெள்ளி... மேலும் பார்க்க