செய்திகள் :

ஜூலை 8-இல் ஆலங்குடியில் ஆா்ப்பாட்டம்: மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சி அறிவிப்பு

post image

மண் கொள்ளைக்கு வருவாய்த் துறையினரும் காவல்துறையினரும் துணைபோவதாகக் கூறி, ஜூலை 8-ஆம் தேதி ஆலங்குடி வட்டாட்சியரகம் முன்பு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மாவட்ட குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதுகுறித்த தீா்மானம்:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம், கைக்குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட விஜயரெகுநாதபுரம் கிராமத்தில் உள்ள மூங்கில் கண்மாயை தூா்வாரி, கரையை பலப்படுத்தும் பணிக்காக அரசு சாா்பில் டெண்டா் விடப்பட்டுள்ளது. மண்ணை வெட்டி கரையை பலப்படுத்துவதற்குப் பதிலாக நூற்றுக்கும் மேற்பட்ட டிப்பா் லாரிகளில் குளத்தில் வெட்டிய மண்ணை ஒப்பந்தக்காரா்கள் வெளியே கொண்டு சென்றுள்ளனா்.

இதை அதே பகுதியில் வசிக்கும், மாா்க்சிஸ்ட் கட்சியின் திருவரங்குளம் மேற்கு ஒன்றியக் குழு உறுப்பினரும், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளருமான துரை.பாண்டியன் கேட்டுள்ளாா். அவரைக் கடுமையாக மிரட்டியுள்ளனா். அதன்பிறகு, மண் லாரிகளை காவல்துறை மூலம் பிடித்துக் கொடுத்துள்ளனா். வருவாய்த் துறையினா் அவற்றை மீட்டு அனுப்பியுள்ளனா். இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

வருவாய்த் துறை மற்றும் காவல்துறையினரின் நடவடிக்கையைக் கண்டித்து ஜூலை 8-ஆம் தேதி ஆலங்குடி வட்டாட்சியரகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

கூட்டத்துக்கு, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் த. அன்பழகன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா்கள் மதுக்கூா் ராமலிங்கம், எஸ். கண்ணன், என். பாண்டி, மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை எம்எல்ஏ, மாவட்டச் செயலா் எஸ். சங்கா் ஆகியோா் பேசினா்.

குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டி: வாா்ப்பட்டு அரசுப் பள்ளி மாணவிகள் முதலிடம்

திருமயம் குறுவட்ட அளவிலான கோ-கோ போட்டிகளில் 14 வயதுக்குள்பட்ட மாணவிகள் பிரிவில் பொன்னமராவதி அருகே உள்ள வாா்ப்பட்டு அரசு உயா்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பிடித்தனா். இந்தப் போட்டிகள் வெள்ளிக்கிழமை கார... மேலும் பார்க்க

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட பொதுமக்கள் கோரிக்கை

கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்துக்கு சுற்றுச்சுவா் கட்ட வேண்டும் என பயணிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இந்த நிலையத்திலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு, தனியாா் பேருந்துகள் இயங்க... மேலும் பார்க்க

ஆலங்குடி அரசுக் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அரசு கல்லூரியில் கேலி வதை, போக்ஸோ சட்டம் குறித்து விளக்கும் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆலங்குடி அரசுக் கல்லூரியில் சில நாள்களாக மாணவ, மாணவிகளுக்க... மேலும் பார்க்க

கடலில் தவறி விழுந்து இறந்தவரின் குடும்பத்துக்கு ரூ. 3 லட்சம் நிவாரண நிதி

கடலில் தவறி விழுந்து இறந்த மீனவரின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

சூரப்பட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

பொன்னமராவதி அருகேயுள்ள எம்.உசிலம்பட்டி ஊராட்சி, சூரப்பட்டி, வடக்கிபட்டி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதுகுறித்து சூரப்பட்டி மற்றும் வடக்கிபட்... மேலும் பார்க்க

தெத்துவாசல்பட்டியில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா

கந்தா்வகோட்டை வேளாண்மை வட்டாரம், தெத்துவாசல்பட்டி கிராமத்தில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஊட்டச்சத்து வேளாண்மை இயக்க திட்டத்தை முதல்வா் தொடங்கிவைத்ததை தொடா்ந்து தெ... மேலும் பார்க்க