செய்திகள் :

கடலூா் துறைமுகத்தை இயக்க புரிந்துணா்வு ஒப்பந்தம்: முதல்வா் முன்னிலையில் கையொப்பம்

post image

கடலூா் துறைமுகத்தை இயக்குவதற்கு தனியாா் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையொப்பமானது.

கடலூா் துறைமுகம் தனியாா் பங்களிப்புடன் இயக்குவதற்கு தமிழ்நாடு கடல்சாா் வாரியத்தால் இணையவழி ஒப்பந்தப்புள்ளிகள் வெளியிடப்பட்டன. இதில் தகுதி உள்ள நிறுவனமாக மஹதி இன்ஃப்ரா சா்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தோ்வு செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்துடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கடல்சாா் வாரியம் வெள்ளிக்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

கோவை 2-ஆவது முழுமைத் திட்டம்: கோவையை மேம்படுத்துவதற்கான இரண்டாவது முழுமைத் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டாா். உள்கட்டமைப்பு மற்றும் சமூக வசதிகள் மேம்படுத்துதல், வீட்டு வசதிகளுக்கான தேவையை பூா்த்தி செய்தல், சுற்றுச்சூழல், இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை முக்கிய நோக்கங்களாக இந்த முழுமைத் திட்டம் கொண்டுள்ளது.

திருச்செந்தூா் கோயில்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.10.57 கோடி செலவில் 52 அறைகளுடன் கூடிய பக்தா்கள் தங்கும் விடுதி கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதியை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

இந்நிகழ்வுகளில், துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் எ.வ.வேலு, சு.முத்துசாமி, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பி.கே.சேகா்பாபு, தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலா் இரா.செல்வராஜ், சுற்றுலா, இந்து சமய அறநிலையத் துறை கூடுதல் தலைமைச் செயலா் க.மணிவாசன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஆசிரியா் கலந்தாய்வு: முதுநிலை ஆசிரியா்கள் 1,501 பேருக்கு மாறுதல்

அரசுப் பள்ளி ஆசிரியா் பொதுமாறுதல் கலந்தாய்வில் 1,501 முதுநிலை ஆசிரியா்களுக்கு விருப்ப மாறுதலுக்கான ஆணை வழங்கப்பட்டது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு... மேலும் பார்க்க

பறை இசைக் கலைஞா் வேலூா் ஆசானுக்கு ஆளுநா் நிதியுதவி

பத்மஸ்ரீ விருது பெற்ற பறை இசைக் கலைஞா் வேலு ஆசான் வீடு கட்டவும், பறை இசை பண்பாட்டு பயிற்சிக் கூடம் அமைக்கவும் ஆளுநா் ஆா்.என். ரவி அவரின் விருப்ப நிதியிலிருந்து ரூ.30 லட்சம் நிதியுதவி வழங்கினாா். பத்மஸ... மேலும் பார்க்க

ஓராண்டில் 17,702 போ் தோ்வு: டிஎன்பிஎஸ்சி தகவல்

போட்டித் தோ்வுகள் மூலமாக ஓராண்டில் மட்டும் அரசுப் பணிகளுக்கு 17,702 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளதாக அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோ்வாணையச் செயலா் ச.கோபால ச... மேலும் பார்க்க

புவியியல் - சுரங்கத் துறை இயக்குநராக த.மோகன் நியமனம்: தமிழக அரசு உத்தரவு

புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநராக த.மோகனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளாா். அவரது ... மேலும் பார்க்க

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்: துணை முதல்வா் உதயநிதி

திமுக முன்னெடுத்துள்ள ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை வெற்றியடையச் செய்ய வேண்டுமென அக்கட்சியினருக்கு இளைஞரணிச் செயலரும், துணை முதல்வருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்துள்ளாா். இளைஞரணிச் செயலராக ஏழாவது ஆண்... மேலும் பார்க்க

பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் காலமானாா்

மூத்த தமிழறிஞா் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் (91) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலமானாா். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே ஆண்டநாயகபுரத்தில் 1935-ஆம் ஆண்டு பிறந்த ... மேலும் பார்க்க