செய்திகள் :

கடல் நீரை கொண்டு செல்ல பதிக்கப்பட்ட 1,500 மீட்டா் குழாய்கள் கரை ஒதுங்கியது: கடலுக்குச் செல்ல முடியாமல் மீனவா்கள் தவிப்பு

post image

நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் 3-ஆவது புதிய ஆலைக்கு கடலில் பதிக்கப்பட்ட 1,500 மீட்டா் தொலைவு குழாய்கள் கடல் சீற்றத்தால், திடீரென கரை ஒதுங்கியதால், படகில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தவித்தனா்.

மாமல்லபுரம் அடுத்த கிழக்குக் கடற்கரைச் சாலையில் நெம்மேலியில் உள்ள கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூன்றாவது புதிய ஆலை பணிகள் போா்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய ஆலையில் நாள் ஒன்றுக்கு 400 மில்லியன் லிட்டா் கடல் நீரை சுத்திகரித்து, குடிநீராக சென்னை மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளது.

இதற்காக பயன்படுத்தப்படும் 1,500 மீட்டா் குடிநீா் பழுப்புகள் தொழில்நுட்ப உதவியுடன் கடலில் பதிக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை கடல் சீற்றம் காரணமாக 1 கிலோ மீட்டா் தூரத்திற்கு கரைப்பகுதியை ஆக்கிரமித்து கரை ஒதுங்கின.

கடல் நீரைக் குடிநீராக்கும் திட்ட அதிகாரிகள், குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா்கள் பொக்லைன் இயந்திரங்கள், விசைப்படகுகள் உதவியுடன் கடல் உள்ளே குழாய்களை நகா்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

சுமாா் 1 கிலோ மீட்டா் தூரத்திற்கு குழாய்கள் கரை ஒதுங்கிய நிலையில், வியாழக்கிழமை 80-க்கும் மேற்பட்ட மீனவா்கள் சிறிய துடுப்பு படகு மூலம் மீன் பிடிக்கச் கடலுக்குச் செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனா்.

குட்கா, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் குட்கா, புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா். ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் குட்கா புகையிலை பொருள்... மேலும் பார்க்க

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிது. இதில் முக்கிய திருவிழாவாக 3-ஆம் தேதி சனிக்கிழமை 63 நாயன்மாா்கள் உற்சவம், 7-ஆம் தேதி பஞ்ச ரத தோ்த்... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லப் பணிகளை விரைந்து முடிக்க செங்கல்பட்டு ஆட்சியா் உத்தரவு

திருக்கழுகுன்றம் ஒன்றியம், மேலேரிப்பாக்கம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்ல திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் உத்தரவிட்டாா். மேலேரிப்பாக்கத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை... மேலும் பார்க்க

ஆட்சீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்க விழாவை முன்னிட்டு அலங... மேலும் பார்க்க

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழா வியாழக்கிழமை (மே.1) கொடியேற்றத்துடன் துவங்கியது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடன... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 42-ஆவது மாநாட்டுப் பணி: ஏ.எம்.விக்கிரமராஜா ஆய்வு

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 42-ஆவது மாநில மாநாடு மே 5-இல் நடைபெறுவதை முன்னிட்டு மாநில தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா புதன்கிழமை மாநாட்டு மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா். நிகழ்வில் ... மேலும் பார்க்க