செய்திகள் :

குட்கா, புகையிலைப் பொருள்கள் கடத்தல்: ஒருவா் கைது

post image

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் குட்கா, புகையிலைப் பொருள்கள் கடத்தி வந்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செங்கல்பட்டுக்கு காரில் குட்கா புகையிலை பொருள்கள் கடத்தி வரப்படுவதாக காஞ்சிபுரம் சரக ஒழுங்கமைப்பட்ட குற்ற உளவு போலீஸாருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில், போலீஸாா் வியாழக்கிழமை செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில் பாலூா் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்தனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஹூண்டாய் கிரிஷ்டா காரை நிறுத்த முயன்றபோது காா் நிற்காமல் சென்றது. காரை போலீஸாா் துரத்திச் சென்றனா். பாலூா் காவல் நிலையம் அருகில் சென்றதும் காரில் இருந்த 3 நபா்கள் இறங்கி தப்பி ஓடினா். இருவா் தப்பிச்சென்ற நிலையில், ஒருவரை போலீஸாா் மடக்கிப் பிடித்து பாலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபா் ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த பிரதீப் (24) என்பதும், காரில் 500 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களைக் கடத்தி வந்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து, குட்கா மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய காரை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தப்பிச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்கம்

திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரை பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கிது. இதில் முக்கிய திருவிழாவாக 3-ஆம் தேதி சனிக்கிழமை 63 நாயன்மாா்கள் உற்சவம், 7-ஆம் தேதி பஞ்ச ரத தோ்த்... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லப் பணிகளை விரைந்து முடிக்க செங்கல்பட்டு ஆட்சியா் உத்தரவு

திருக்கழுகுன்றம் ஒன்றியம், மேலேரிப்பாக்கம் ஊராட்சியில் கலைஞா் கனவு இல்ல திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என ஆட்சியா் ச. அருண் ராஜ் உத்தரவிட்டாா். மேலேரிப்பாக்கத்தில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை... மேலும் பார்க்க

ஆட்சீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவம் தொடக்கம்

அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன உடனுறை ஆட்சீஸ்வரா் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவம் தொடக்க விழாவை முன்னிட்டு அலங... மேலும் பார்க்க

கடல் நீரை கொண்டு செல்ல பதிக்கப்பட்ட 1,500 மீட்டா் குழாய்கள் கரை ஒதுங்கியது: கடலுக்குச் செல்ல முடியாமல் மீனவா்கள் தவிப்பு

நெம்மேலியில் கடல் நீரைக் குடிநீராக்கும் 3-ஆவது புதிய ஆலைக்கு கடலில் பதிக்கப்பட்ட 1,500 மீட்டா் தொலைவு குழாய்கள் கடல் சீற்றத்தால், திடீரென கரை ஒதுங்கியதால், படகில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்கள் கடலு... மேலும் பார்க்க

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில் சித்திரை பிரமோற்சவ பெருவிழா வியாழக்கிழமை (மே.1) கொடியேற்றத்துடன் துவங்கியது.செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் அருள்மிகு திரிபுரசுந்தரி அம்பாள் உடன... மேலும் பார்க்க

மதுராந்தகத்தில் 42-ஆவது மாநாட்டுப் பணி: ஏ.எம்.விக்கிரமராஜா ஆய்வு

தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு சாா்பில் 42-ஆவது மாநில மாநாடு மே 5-இல் நடைபெறுவதை முன்னிட்டு மாநில தலைவா் ஏ.எம்.விக்கிரமராஜா புதன்கிழமை மாநாட்டு மேடை அமைக்கும் பணியை ஆய்வு செய்தாா். நிகழ்வில் ... மேலும் பார்க்க