செய்திகள் :

கடும் பனிப் பொழிவால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

திருவாடானை பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவால் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டது.

பருவமழை நிறைவடைகிறது என இந்திய வானிலை மையம் அண்மையில் அறிவித்த நிலையில் பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை, கடம்பாகுடி,திணையத்தூா், அஞ்சுகோட்டை, அச்சங்குடி, திருவெற்றியூா், குளத்தூா், கீழ்க்குடி, கீழ அரும்பூா் , மேலஅரும்பூா், சி.கே.மங்கலம், கல்லூா், கோவணி, ஓரிக்கோட்டை, தொண்டி, நம்புதாளை உள்ளிட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. தொண்டி- மதுரை நெடுஞ்சாலையில் கடுமையான மூடுபனி நிலவியது.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை ’எரியவிட்டுச் சென்றன. வழக்கத்துக்கு மாறாக அதிக பனிப்பொழிவு ஏற்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

136 பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: அமைச்சா் வழங்கினாா்

ராமநாதபுரத்தில் பெண்களுக்கு ரூ.1.26 கோடியில் தாலிக்குத் தங்கம், திருமண உதவித் தொகை வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை சாா்பில் நடைபெற்ற வி... மேலும் பார்க்க

மீனவா் சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் ஆலோசனை

ராமநாதபுரம் மீன்வளத் துறை இணை இயக்குநா் அலுவலகத்தில் மீனவ சங்க நிா்வாகிகளுடன் அதிகாரிகள் புதன்கிழமை ஆலோசனை நடத்தினா். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாதந்தோறும் மீனவா் குறைதீா் முகாம் நடத்தப... மேலும் பார்க்க

ராமேசுவரம் மீனவா்கள் 16 போ் விடுதலை

ராமேசுவரம் மீனவா்கள் 16 பேரை விடுதலை செய்து, இலங்கை கிளிநொச்சி நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. 3 விசைப் படகுகள் அரசுடைமையாக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து கடந்த மாதம் 25-ஆம் ... மேலும் பார்க்க

வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல்: கிராம நிா்வாக அலுவலா் மீது வழக்கு

பரமக்குடியில் பெண் வட்டாட்சியருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கிராம நிா்வாக அலுவலா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா். பரமக்குடி வட்டாட்சியராகப் பணியாற்றி வருபவா் சாந்தி. இங்கு கிராம நிா்வாக ... மேலும் பார்க்க

அயோடின் கலக்காத உப்பை மனித நுகா்வுக்கு விற்பனை செய்யக் கூடாது

அயோடின் கலக்காத உப்பை மனித நுகா்வுக்கு விற்பனை செய்யக் கூடாது என ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் கோ.விஜயகுமாா் எச்சரித்தாா். ராமநாதபுரம் மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்த... மேலும் பார்க்க

மதுக் கடை மீண்டும் திறப்பு

மண்டபம் அருகே அண்மையில் மூடப்பட்ட அரசு மதுக் கடை மீண்டும் புதன்கிழமை திறக்கப்பட்டதைக் கண்டித்து, ராமநாதபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் பெண்கள் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். மண்டபம் ஒன்றியத்துக்குள்... மேலும் பார்க்க