செய்திகள் :

கட்சியின் தலைவர் நான்தான்; அன்புமணி தலைவர் எனக் கூறினால் நடவடிக்கை: ராமதாஸ்

post image

அன்புமணி தன்னை பாமகவின் தலைவர் என்று கூறினால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமகவில் ராமதாஸ் - அன்புமணிக்கு இடையே மோதல் நிலவி வரும் நிலையில், கட்சிக்கு உரிமை கோரி இரண்டு தரப்பினரும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர்.

இதனிடையே ராமதாஸின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 25 முதல் தமிழகம் முழுவதும் உரிமை மீட்பு பயணம் நடத்தப்படும் என்று அன்புமணி அறிவித்துள்ளார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,

"கட்சியின் தலைவராக நான் கடந்த மே 30 ஆம் தேதி நான் பொறுப்பேற்றேன். அதன்பின்னர் செயற்குழு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி மகளிர் மாநாடு நடைபெற இருக்கிறது.

இந்நிலையில் பாமக தலைமையகம் சென்னையில் இருந்து விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்திற்கு மாற்றப்படுகிறது. வேறு எங்கும் நம்முடைய தலைமை அலுவலகம் இல்லை என்பதை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். வேறு இடங்களில் பாமக தலைமையகம் என்று வைத்திருந்தால் அது சட்டத்திற்குப் புறம்பானது.

அதேபோல கட்சியின் முக்கிய பொறுப்புகளுக்கு யாராவது, ‘நான் தான்' என கூறிக்கொண்டு வந்தால் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள்.

பாமகவில் கெளரவ தலைவராக ஜி.கே.மணி, செயல் தலைவராக அண்புமணி என பொறுப்புகள் வழங்கப்பட்டு புதிய பொறுப்பாளர்கள் பட்டியல் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பட்டு உள்ளது.

அன்புமணியின் பயணத்தால் வட தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே காவல்துறை அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

பாமக கொடியை வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்பதை திட்டவட்டமாக சொல்லியிருக்கிறேன். அன்புமணி தன்னுடைய பெயருக்கு பின்னால் என்னுடைய பெயரை போடக்கூடாது என்றும் சொல்லியிருக்கிறேன். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

PMK founder Ramadoss has said that action will be taken against Anbumani if he claims to be the leader of the PMK.

நெருப்புடன் விளையாடாதீர்கள்... முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை!

சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக ’நெருப்புடன் விளையாடாதீர்கள்’ என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

பிகாரில் வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கை: முழுவீச்சில் எதிர்ப்போம்! -முதல்வர் ஸ்டாலின்

பிகாரில் வாக்காளர்களை நீக்குவதற்கான யுக்தியை தேர்தல் ஆணையம் கையாளுகிறது என்று முதல்வர் மு. க .ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிகார் மாநிலத்தில் 52 லட்சம் வாக்காளா்கள் வாக்காளா் பட்டியலில் இர... மேலும் பார்க்க

நடப்பாண்டில் 4ஆவது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை !

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் நடப்பாண்டில் நான்காவது முறையாக அணையின் முழு கொள்ளளவு 120 அடியை எட்டியது.மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை... மேலும் பார்க்க

கும்மிடிப்பூண்டி சிறுமி பாலியல் வன்கொடுமை! சூலூர்பேட்டையில் ஒருவர் கைது

திருவள்ளூா் மாவட்டம், ஆரம்பாக்கத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.திருவள்ளூர், கும்... மேலும் பார்க்க

ரிதன்யா வழக்கு: காவல்துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

ரிதன்யாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரின் ஜாமீன் மனு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள கைகாட்டிபுதூரைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மகள... மேலும் பார்க்க

அடுத்த 3 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக, இன்று(ஜூலை 25) தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், ... மேலும் பார்க்க