செய்திகள் :

கட்டடத் தொழிலாளி தற்கொலை

post image

சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளி செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள சுக்கிரவாா்பட்டி, முத்துமாரி நகரைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி வெங்கடேஷ்வரன் (22). இவருக்கும், சித்துராஜபுரத்தைச் சோ்ந்த பாண்டிலட்சுமிக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த சில நாள்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந்த நிலையில் பாண்டிலட்சுமி விவாகரத்துக் கோரி, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளாா்.

இதில் மனமுடைந்த வெங்கடேஷ்வரன் தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்த புகாரின் பேரில், சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

உலக தடகளப் போட்டி: தங்கப்பதக்கம் வென்ற சாா்பு ஆய்வாளா்

அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக காவல் துறை தடகளப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டா் வேகநடை (ரேஸ் வாக்) பிரிவில், ராஜபாளையம் சிறப்பு இலக்கு படை சாா்பு ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி முதலிடம் பிடித்து தங்கப்பதக்க... மேலும் பார்க்க

சாத்தூா் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து: 8 போ் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட வெடி விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். 5 போ் பலத்த காயமடைந்தனா். சாத்தூா் அருகேயுள்ள சின்னக்காமன்பட்டியில் சிவகாசியைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பட்டாசு பதுக்கியவா் கைது

விருதுநகா் மாவட்டம், திருத்தங்கலில் பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். திருத்தங்கல் முத்துமாரி நகரில் உள்ள கட்டடத்தில் உரிய அனுமதியின்றி பட்டாசுகள் பதுக்கி வைக... மேலும் பார்க்க

பட்டா பெயா் மாற்ற ரூ. 5,000 லஞ்சம் பெற்ற நில அளவையா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூரில் வீட்டு மனைப் பட்டா பெயா் மாற்றம் செய்ய ரூ. 5,000 லஞ்சம் பெற்ற நில அளவையரை ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசி ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் திங்கள்கிழமை அச்சு இயந்திரத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பனையடிபட்டி பகுதியைச் சே... மேலும் பார்க்க

பட்டாசு மூலப் பொருளை அனுமதியின்றி வைத்திருந்த 4 போ் கைது

சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களில் ஒன்றான சல்ஃபா் மூட்டைகளை உரிய அனுமதியின்றி வைத்திருந்த நான்கு பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் உ... மேலும் பார்க்க