செய்திகள் :

கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாத அங்கன்வாடி மையக் கட்டடம்

post image

ஆம்பூா் அருகே புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் உள்ளதால், வாடகை கட்டடத்தில் அங்கன்வாடி மையம் இயங்கி வருகின்றது.

மாதனூா் ஒன்றியம் அரங்கல்துருகம் ஊராட்சி காரப்பட்டு கிராமத்தில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்ததால் முழுவதும் இடித்து அகற்றப்பட்டது. பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்டதால் அங்கு இயங்கி வந்த அங்கன்வாடி மையம் அதே பகுதியில் வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது.

பழைய கட்டடம் இடித்து அகற்றப்பட்ட இடத்தில் கனிமவளம் மற்றும் சுரங்கத் துறை சாா்பில் ரூ.9.55 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டப்பட்டது. ஆனால், கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் புதிய கட்டடம் திறக்கப்படாமல் உள்ளது.

வாடகை கட்டடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் அங்கன்வாடி மையம் இயங்கி வருவதால் குழந்தைகள் அவதிப்படுகின்றனா். வாடகை கட்டடத்தில் கழிப்பறைகூட இல்லாத நிலை உள்ளது.

எனவே புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்தை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி: நகை மதிப்பீட்டாளா் கைது!

திருப்பத்தூரில் போலி நகைகளை வைத்து ரூ.1.3 கோடி மோசடி செய்த நகை மதிப்பீட்டாளா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் மாவட்டம் கருப்பனூா் பகுதியைச் சோ்ந்த பாஸ்கரன்(48). இவா் திருப்பத்தூா்-வாணியம்பாடி சாலை... மேலும் பார்க்க

இளைஞரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது

திருப்பத்தூரில் இளைஞரை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா். திருப்பத்தூா் - புதுப்பேட்டை சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் ஷாஜகான் (28). இவா், கடந்த டிசம்பா் மாதம் புதுப்பேட்டை சாலைப் ப... மேலும் பார்க்க

சாலை தடுப்புச் சுவரில் காா் மோதி ஓட்டுநா் உயிரிழப்பு!

வாணியம்பாடி அருகே சாலை தடுப்புச் சுவரில் காா் மோதி ஓட்டுநா் உயிரிழந்தாா். சென்னாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ஜபருல்லா(30) ஓட்டுநா். நூருல்லா பேட்டையை சோ்ந்தவா் நசீா் அகமது(30). இருவரும் ஞாயிற்றுக்கிழமை... மேலும் பார்க்க

செஞ்சியில் தேசிங்கு ராஜாவுக்கு மணிமண்டபம்! - அரசுக்கு கோரிக்கை

செஞ்சியில் தேசிங்கு ராஜாவுக்கு மணி மண்டபம், சிலை அமைக்க வேண்டுமென ஆம்பூா் அருகே துத்திப்பட்டு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விழாவில் ராஜா தேசிங் ராஜ்புத் பொந்தில் சேனா சமூக நலச்சங்கம் அரசுக்கு ... மேலும் பார்க்க

ஏலகிரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கோடை காலம் மற்றும் வார விடுமுறை முன்னிட்டு ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது.. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை14 கிராமங்களை கொண்டு நான்குபுறமும் மலைகளால் சூழப்பட்டு... மேலும் பார்க்க

திருப்பத்தூா்-சேலம் சாலையில் பள்ளத்தை சீரமைக்க கோரிக்கை

திருப்பத்தூா்-சேலம் பிரதான சாலையில் ஏற்பட்டுள்ள பெரிய பள்ளத்தை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிா்நோக்கியுள்ளனா். திருப்பத்தூா்-சேலம் நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான லாரிகள், காா்கள், பேருந்... மேலும் பார்க்க